search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்
    X

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொலை வழக்கு கைதி தப்பி ஓடி விட்டார்.

    மதுரை:

    தேனியை சேர்ந்தவர் சிங்கம் என்ற ராஜா (வயது 35). இவர் மீது கொலை வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் தேனி போலீசார் கொலை வழக்கில் ராஜாவை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். ராஜாவுக்கு நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    முதலில் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ராஜா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை ராஜா காலைக்கடன் கழிக்கச்செல்வதாக போலீசாரிடம் கூறி விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. அப்போது தான் போலீசாரை ஏமாற்றி விட்டு ராஜா தப்பி ஓடியது தெரியவந்தது. அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் முக்கிய இடங்களில் தேடியும் காணவில்லை.

    இதுகுறித்து மதிச்சியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜாவை தேடி வருகிறார்கள்.

    சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×