search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட லாரி உரிமையாளரின் வீடு.
    X
    நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட லாரி உரிமையாளரின் வீடு.

    வாடிப்பட்டி அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

    வாடிப்பட்டி அருகே லாரி உரிமையாளர் வீட்டில் பட்டப்பகலில் ரூ.2 லட்சத்துடன் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ஜான் மைக்கேல் கென்னடி (வயது 55), லாரி உரிமையாளர்.

    இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பட்டிவீரன்பட்டியில் உள்ள தோட்டத்துக்குச் சென்றார். இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய அனைவரும் பின்னர் தூங்கி விட்டனர்.

    இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் குளியலறை ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர். சந்தேகம் அடைந்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

    இது குறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சமயநல்லூர் போலீஸ் டி.எஸ்.பி. மோகன் குமார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை செய்தார்.

    தடயவியல் நிபுணர்கள், குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். துப்பறியும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது லாரி உரிமையாளர் வீட்டில் இருந்து போடி நாயக்கன்பட்டி மந்தை வரை ஓடி நின்றது.

    பட்டப்பகலில் குளியலறை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவின் மேலிருந்த சாவியை எடுத்து திறந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
    Next Story
    ×