என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் மகளை கொன்று, தாய் தூக்கிட்டு தற்கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை
Byமாலை மலர்4 Aug 2017 7:47 AM GMT (Updated: 4 Aug 2017 7:47 AM GMT)
வேலூரில் மகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் பபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் வசந்தபுரம் பர்மா காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன். டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வாணிஸ்ரீ (வயது 33). மகள் சுபஸ்ரீ(7), மகன் கிஷோர்குமார் (6) உள்ளனர்.
கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரன் வீட்டு மாடிக்கு சென்று தூங்கி விட்டார்.
இதனால் மனமுடைந்த வாணிஸ்ரீ தற்கொலை செய்ய முடிவு செய்தார். நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த அவரது மகளை தூக்கில் தொங்க விட்டு கொன்றுள்ளார்.
பின்னர் மகனையும் தூக்கில் தொங்கவிட முடிவு செய்தார். சிறுவன் அழுது துடித்து தப்பி ஓடிவிட்டான். இதனால் அவனை விட்டு விட்டார். பின்னர் வாணிஸ்ரீ புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை நேரில் கண்ட சிறுவன் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். வாணிஸ்ரீ, சுபஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசின் முதற்கட்ட விசாரணையில் வாணிஸ்ரீ அவரது மகளை கொன்று விட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் போலீசாருக்கு மேலும் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக வாணிஸ்ரீயின் கணவர் குமரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் வசந்தபுரம் பர்மா காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன். டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வாணிஸ்ரீ (வயது 33). மகள் சுபஸ்ரீ(7), மகன் கிஷோர்குமார் (6) உள்ளனர்.
கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரன் வீட்டு மாடிக்கு சென்று தூங்கி விட்டார்.
இதனால் மனமுடைந்த வாணிஸ்ரீ தற்கொலை செய்ய முடிவு செய்தார். நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த அவரது மகளை தூக்கில் தொங்க விட்டு கொன்றுள்ளார்.
பின்னர் மகனையும் தூக்கில் தொங்கவிட முடிவு செய்தார். சிறுவன் அழுது துடித்து தப்பி ஓடிவிட்டான். இதனால் அவனை விட்டு விட்டார். பின்னர் வாணிஸ்ரீ புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை நேரில் கண்ட சிறுவன் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். வாணிஸ்ரீ, சுபஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசின் முதற்கட்ட விசாரணையில் வாணிஸ்ரீ அவரது மகளை கொன்று விட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் போலீசாருக்கு மேலும் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக வாணிஸ்ரீயின் கணவர் குமரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X