search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குளத்தில் நாளை இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்: திருநாவுக்கரசர் பங்கேற்பு
    X

    ஆலங்குளத்தில் நாளை இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்: திருநாவுக்கரசர் பங்கேற்பு

    ஆலங்குளத்தில் நாளை இந்திரா காந்தியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்.
    நெல்லை:

    முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் அன்னை இந்திரா காந்தியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா சிறப்பாக  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டங்கள் நடத்தியும் கொண்டாடப்படுகிறது. 

    நாளை 28-ந் தேதி ஆலங்குளத்தில் மாலை 7 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமை தாங்குகிறார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மேலும் நெல்லை மாநகர், கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் ராம்நாத், கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, மாநில விவசாய அணி செயலாளர் சங்கரபாண்டியன், அமீர்கான், அந்தோணி, வாகை கணேசன், காவேரி உட்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×