என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை
Byமாலை மலர்27 May 2017 10:05 AM GMT (Updated: 27 May 2017 10:05 AM GMT)
மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்தினர். இதில் குறைபாடுகள் உள்ள 90-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் எடைகற்கள் மற்றும் தராசுகள் குறைபாடு தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து தொழிலாளர் துறை ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் காய்கறி மார்க்கெட்டில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.
எடைகற்கள் முத்திரையிடப்பட்டுள்ளதா? எலக்ட்ரானிக்ஸ் தராசுகள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் குறைபாடுகள் உள்ள 90-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆய்வு குறித்து தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி கூறுகையில், எடைகற்கள், தராசுகள் குறைபாடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்வது போன்ற புகார்களை ஜிழிலிவிசிஜிஷி என்ற செயலியை இலவசமாக செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் புகார்களை தெரிவிக்கலாம்.
எந்த இடத்தில் புகார் தருகிறார்களோ அந்த பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் சோதனை செய்து அது குறித்த விவரங்களை 3 நாளில் புகார்தாரரின் செல்போனுக்கு தெரிவிக்கப்படும். நடவடிக்கை எடுக்காத புகார்கள் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இருக்கும் என்றார்.
மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் எடைகற்கள் மற்றும் தராசுகள் குறைபாடு தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து தொழிலாளர் துறை ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் காய்கறி மார்க்கெட்டில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.
எடைகற்கள் முத்திரையிடப்பட்டுள்ளதா? எலக்ட்ரானிக்ஸ் தராசுகள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் குறைபாடுகள் உள்ள 90-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆய்வு குறித்து தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி கூறுகையில், எடைகற்கள், தராசுகள் குறைபாடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்வது போன்ற புகார்களை ஜிழிலிவிசிஜிஷி என்ற செயலியை இலவசமாக செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் புகார்களை தெரிவிக்கலாம்.
எந்த இடத்தில் புகார் தருகிறார்களோ அந்த பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் சோதனை செய்து அது குறித்த விவரங்களை 3 நாளில் புகார்தாரரின் செல்போனுக்கு தெரிவிக்கப்படும். நடவடிக்கை எடுக்காத புகார்கள் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இருக்கும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X