என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.டி.வி.தினகரன் கைதில் பா.ஜனதா பின்னணி இல்லை: நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்30 April 2017 9:42 AM GMT (Updated: 30 April 2017 9:42 AM GMT)
டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. இரு அணிகளையும் கட்டுப்படுத்தி பா.ஜனதா கட்சி காலூன்ற நினைக்கிறது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பது சரியானது அல்ல.
மோடியின் நலத்திட்டங்களால் பா.ஜனதாவை மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க.வின் இரு அணிகளால் தான் பா.ஜனதா காலூன்றுகிறது என்பது தவறு. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை.
டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதில் பா.ஜனதாவின் தலையீடு எங்கு இருக்கிறது. எல்லாவற்றிலும் பா.ஜனதாவையும், மோடியையும் குறை சொல்வது வழக்கமாகவே இருக்கிறது.
கொடநாட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பு. இந்த வழக்கில் மாநில அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. இரு அணிகளையும் கட்டுப்படுத்தி பா.ஜனதா கட்சி காலூன்ற நினைக்கிறது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பது சரியானது அல்ல.
மோடியின் நலத்திட்டங்களால் பா.ஜனதாவை மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க.வின் இரு அணிகளால் தான் பா.ஜனதா காலூன்றுகிறது என்பது தவறு. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை.
டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதில் பா.ஜனதாவின் தலையீடு எங்கு இருக்கிறது. எல்லாவற்றிலும் பா.ஜனதாவையும், மோடியையும் குறை சொல்வது வழக்கமாகவே இருக்கிறது.
கொடநாட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பு. இந்த வழக்கில் மாநில அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X