என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிஎஸ்கே-யில் டோனி: எந்தெந்த அணி யார் யாரை தக்க வைத்துள்ளது- முழு விவரங்கள்
Byமாலை மலர்4 Jan 2018 2:49 PM GMT (Updated: 4 Jan 2018 2:49 PM GMT)
ஐபிஎல் 2018-க்கான சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துள்ளது. #IPL2018 #IPLRetention
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 லீக் தொடர் மாபெரும் வெற்றியை பெற்று சர்வதேச அளவில் முன்னணி தொடராக விளங்கி வருகிறது. ரசிகர்களின் பேராதரவோடு 10 ஆண்டுகளை சிறப்பாக முடித்துள்ளது. இந்த வருடம் 11-வது வருத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. இதற்கு முன் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது.
தற்போது அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடவில்லை. இதனால் குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பங்கேற்றன. 2018 சீசனில் இந்த இரண்டு அணிகளும் பங்கேற்காது. வீரர்களின் ஏலம் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கு முன் எந்தெந்த அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்பதை இன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் விளையாடியவர்களில் டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. டோனியை முதல் நபராகவும், ரெய்னாவை 2-வது நபராகவும், ஜடேஜாவை 3-வது நபராகவம் தக்கவைத்துக் கொண்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை மட்டும் தகவைத்துக் கொண்டுள்ளது. வேறு யாரையும் அந்த அணி தக்கவைக்கவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் நபராக விராட் கோலியையும், 2-வது நபராக டி வில்லியர்ஸையும், 3-வது நபராக இளம் வீரரான சர்பராஸ் கானையும் தக்கவைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரை தக்கவைத்துள்ளது.
டெல்லி அணி கிறிஸ் மோரிஸ், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.
கொல்கத்தா சுனில் நரைன் மற்றும் அந்த்ரே ரஸல் ஆகியோரை தக்கவைத்துள்ளது. காம்பீரை தக்கவைக்கவில்லை.
ஐதராபாத் அணி வார்னர், புவனேஸ்வர் குமார் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
பஞ்சாப் அணி அக்சார் பட்டேல்-ஐ மட்டுமே தக்கவைத்துள்ளது. #IPL2018 #IPL Retention, MS Dhoni, Virat Kohli
தற்போது அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடவில்லை. இதனால் குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பங்கேற்றன. 2018 சீசனில் இந்த இரண்டு அணிகளும் பங்கேற்காது. வீரர்களின் ஏலம் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கு முன் எந்தெந்த அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்பதை இன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் விளையாடியவர்களில் டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. டோனியை முதல் நபராகவும், ரெய்னாவை 2-வது நபராகவும், ஜடேஜாவை 3-வது நபராகவம் தக்கவைத்துக் கொண்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை மட்டும் தகவைத்துக் கொண்டுள்ளது. வேறு யாரையும் அந்த அணி தக்கவைக்கவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் நபராக விராட் கோலியையும், 2-வது நபராக டி வில்லியர்ஸையும், 3-வது நபராக இளம் வீரரான சர்பராஸ் கானையும் தக்கவைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரை தக்கவைத்துள்ளது.
டெல்லி அணி கிறிஸ் மோரிஸ், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.
கொல்கத்தா சுனில் நரைன் மற்றும் அந்த்ரே ரஸல் ஆகியோரை தக்கவைத்துள்ளது. காம்பீரை தக்கவைக்கவில்லை.
ஐதராபாத் அணி வார்னர், புவனேஸ்வர் குமார் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
பஞ்சாப் அணி அக்சார் பட்டேல்-ஐ மட்டுமே தக்கவைத்துள்ளது. #IPL2018 #IPL Retention, MS Dhoni, Virat Kohli
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X