search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 உலக கோப்பை அணியில் டோனி இடம் பெறுவார் வீராட்கோலி நம்பிக்கை
    X

    2019 உலக கோப்பை அணியில் டோனி இடம் பெறுவார் வீராட்கோலி நம்பிக்கை

    2019 உலக கோப்பை அணியில் டோனி இடம் பெறுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    பல்லேகலே:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்று டெஸ்டிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.

    5 ஒரு நாள் போட்டித் தொடரில் தமுல்லாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வென்று முன்னிலை பெற இந்திய அணி ஆர்வத்துடன் இருக்கிறது.



    இன்றைய போட்டி குறித்து கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக வீரர்களை தயார் படுத்தும் பணியில் இப்போதே திட்டமிட்டு வருகிறோம். வரும் சீசனில் நடைபெறும போட்டிகளில் வீரர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி விளையாட வேண்டும் என்பதை வீரர்கள் நன்கு அறிய வேண்டும்

    டெஸ்டில் விளையாடாத டோனிக்கு சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட பல போட்டிகள் இருக்கிறது. இது அவருக்கு உத்வேகத்தை அளிக்கும். இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு 2019-ம் ஆண்டுக்கான உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு யுவராஜ்சிங் ஏற்கனவே அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். தேர்வின் அடுத்த குறியாக டோனி உள்ளார். சிறப்பாக விளையாடாவிட்டால் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று அவர் தெரிவித்து இருந்தார். இதனால் டோனி நெருக்கடியில் உள்ளார். இலங்கை தொடர் மற்றும் இனிவரும் ஒரு நாள் தொடர்களில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

    டோனி சரியாக விளையாடாவிட்டால் அவரது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது நி‌ஷப்பந்த் தேர்வு செய்யும் நிலையில் தேர்வு குழுவினர் உள்ளனர்.
    Next Story
    ×