search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் அட்டவணை வெளியீடு: ஆஸி.க்கு எதிரான ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது
    X

    இந்திய அணியின் அட்டவணை வெளியீடு: ஆஸி.க்கு எதிரான ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது

    இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிளுக்கு எதிராக விளையாடுகிறது. 3 மாதத்தில் 23 போட்டியில் விளையாடுகிறது.
    இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிளுக்கு எதிராக  விளையாடுகிறது. 3 மாதத்தில் 23 போட்டியில் விளையாடுகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தொடர் மற்றும் போட்டி அட்டவணைக்குழு நேற்று கொல்கத்தாவில் கூடியது. இந்தக் குழு இந்திய அணி செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 23 சர்வதேச போட்டிகளில் விளையாடும் என்று தெரிவித்துள்ளது.



    இந்த மூன்று மாதத்தில் இந்திய மண்ணில் வந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள்  விளையாடுகின்றன. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கும்.

    இந்த மூன்று நாடுகளுடன் விளையாடிய பிறகு இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 11-ந்தேதி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. மற்ற நான்கு போட்டிகள் பெங்களூரு, நாக்பூர், இந்தூர், கொல்கத்தாவில் நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர் 22-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும், மூன்று டி20 கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது.

    இலங்கைக்கு எதிராக நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 24-ந்தேதி வரை மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
    Next Story
    ×