என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்கும் கார்த்தி சிதம்பரம்
Byமாலை மலர்4 Jan 2018 6:13 AM GMT (Updated: 4 Jan 2018 6:13 AM GMT)
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில், அவர் வெளிநாடு சென்று வர அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். #KartiChidambaram #INXmedia
புதுடெல்லி:
ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா, அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகாததால் அவரை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய கார்த்தி சிதம்பரம், வெளிநாடு சென்று வர அனுமதி பெற்றார். தற்போது அவரை ஜனவரி 11-ம் தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் மீண்டும் வெளிநாடு சென்று வர அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். தொழில் விஷயமாக வரும் 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை உச்ச நீதிமன்றம் 8-ம் தேதி விசாரிக்க உள்ளது. #KartiChidambaram #INXmedia #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X