என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்கத்தாவில் இருந்து நாட்டின் தலைநகராக டெல்லி மாறிய தினம் இன்று
Byமாலை மலர்12 Dec 2017 2:35 PM GMT (Updated: 12 Dec 2017 2:35 PM GMT)
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷார் காலத்திலும் கொல்கத்தாவே நாட்டின் தலைநகராகவே தொடர்ந்த நிலையில் 1911-ம் ஆண்டு இன்றைய தேதியில் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
ஐரோப்பியரின் வருகைக்கு முன்னதாக முறையாக கட்டமைக்கப்படாத இந்தியாவே இருந்து வந்தது. பல மாகாணங்கள், சமஸ்தனங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவுக்கு 18-ம் நூற்றாண்டுகளில் வந்த பிரிட்டிஷார் கொல்கத்தாவை தலைமையிடமாக நிர்ணயித்தனர்.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவடைந்து பின்னர் காலம் பிரிட்டன் அரசின் கீழ் இந்தியா வந்த பின்னரும் கொல்கத்தாவே தலைநகராக நீடித்தது.
1911-ம் ஆண்டு இதே நாளில் (டிச.12) ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920-ம் ஆண்டுகளில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே, புதுடெல்லி என பெயர் பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947-ல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்திய பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை என பிரசித்தி பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் புது டெல்லியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக மும்பையும், மருத்துவ தலைநகரமாக சென்னையும், அறியப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X