என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் பட்டாசு விற்பனை தடைக்கு எதிரான மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
Byமாலை மலர்14 Oct 2017 12:00 AM GMT (Updated: 14 Oct 2017 12:01 AM GMT)
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரும் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டல பகுதிகளில் பட்டாசுகளை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்க விதிக்கப்பட்டு இருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கடந்த மாதம் 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், டெல்லியில் பட்டாசு விற்க தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை வருகிற 31-ந் தேதி வரை தொடரும் என்று கடந்த 9-ந் தேதி தீர்ப்பு கூறியது. பட்டாசு விற்பனையை அனுமதிக்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு நவம்பர் 1-ந் தேதி முதல் தான் அமலுக்கு வரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும், முந்தைய உத்தரவில் ஏதேனும் மாற்றம் செய்தால் அது அந்த உத்தரவின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானதாக அமையும் என்றும், எனவே பட்டாசு விற்பனை தொடர்பாக எங்கள் உத்தரவில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.
தீபாவளி கொண்டாடுபவர்கள் வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு வாங்கிய பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டல பகுதிகளில் பட்டாசுகளை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்க விதிக்கப்பட்டு இருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கடந்த மாதம் 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், டெல்லியில் பட்டாசு விற்க தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை வருகிற 31-ந் தேதி வரை தொடரும் என்று கடந்த 9-ந் தேதி தீர்ப்பு கூறியது. பட்டாசு விற்பனையை அனுமதிக்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு நவம்பர் 1-ந் தேதி முதல் தான் அமலுக்கு வரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும், முந்தைய உத்தரவில் ஏதேனும் மாற்றம் செய்தால் அது அந்த உத்தரவின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானதாக அமையும் என்றும், எனவே பட்டாசு விற்பனை தொடர்பாக எங்கள் உத்தரவில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.
தீபாவளி கொண்டாடுபவர்கள் வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு வாங்கிய பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X