search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்திரிகையாளர் கவுரி லங்கேசுக்கு கேரள முதல் மந்திரி நினைவஞ்சலி
    X

    பத்திரிகையாளர் கவுரி லங்கேசுக்கு கேரள முதல் மந்திரி நினைவஞ்சலி

    கேரள மாநிலத்தில் பத்திரிகையாளர் கவுரி லங்கேசுக்கு நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.
    திருவனந்தபுரம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த 5-ம் தேதி வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கேரள மாநில இளைஞர் நல ஆணையம் மற்றும் கேரள பல்கலைக்கழக மாணவர் சங்கம் சார்பில் கவுரி லங்கேசுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கவுரி லிங்கேஷ் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பேரணிகள், ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×