search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவந்தான் அருகே பள்ளி வாகனம் மோதி 2½ வயது குழந்தை பலி
    X

    சோழவந்தான் அருகே பள்ளி வாகனம் மோதி 2½ வயது குழந்தை பலி

    சோழவந்தான் அருகே பள்ளி வாகனம் மோதியதில் 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகில் உள்ள காடுபட்டியை சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மனைவி ரேகா. இவர்களது மகன் குகன் (வயது 2½). இவன் இன்று காலை வீட்டு முன்புள்ள சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது அந்த வழியே விக்கிரமங்கலத்தை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் வந்தது. அந்த வாகனம் எதிர்பாராத விதமாக குகன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட குகன் சம்பவ இடத்திலேயே பலியானான். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து குறித்து தகவலறிந்த காடுபட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமாக வேன் டிரைவர் சம்பத் (23) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×