என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவையாறு அருகே தூக்குபோட்டு 2 பெண்கள் தற்கொலை
திருவையாறு:
திருவையாறை அடுத்த மணக்கரம்பை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஜெர்த்துரோஸ் (வய35) இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 7 மாதத்தில் குழந்தை உள்ளது. ஜெர்த்து ரோஸ் அரசுபள்ளி ஆசிரியை. இவர் கடந்த சிலமாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.
அவரது தாயார் அன்பரசி கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
திருவையாறு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் செந்தில். இவர் மனைவி ராதா(35). இவருக்கு திருமணமாகி 10 வயதில் சண்முகநாதன் என்ற மகன் உள்ளான். இவர் கடந்த சிலநாட்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம். நேற்று வீட்டில் தூக்குபோட்டு கொண்டார். அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவந்தனர். பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக கூறினார். அவருடைய தந்தை சுபாஷ்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்