என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரம் கோவிலுக்கு ஜனாதிபதி 23-ந்தேதி வருகை: மண்டபம் ஹெலிபேட் தளத்தில் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்14 Dec 2017 5:35 AM GMT (Updated: 14 Dec 2017 5:35 AM GMT)
வருகிற 23-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேசுவரம் வருகிறார். இதையொட்டி மண்டபம் ஹெலிபேட் தளத்தில் கலெக்டர் நடராஜன் இன்று ஆய்வு செய்தார்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். காசி போன்று புகழ்பெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23-ந்தேதி வருகை தந்து சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அன்றைய தினம் காலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படும் அவர் பகல் 10.30 மணி அளவில் மதுரை வருகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் ஹெலிபேட் தளம் செல்கிறார்.
பின்னர் கார் மூலம் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லும் அவர் அங்கு தரிசனம் செய்து விட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி ராமேசுவரத்தில் தற்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நடராஜன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளம், அப்துல் கலாம் மணி மண்டபம் பகுதிகளில் அவர் ஆய்வு நடத்தினார்.
பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செல்ல உள்ள இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்தும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.
ராமேசுவரம் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். காசி போன்று புகழ்பெற்று விளங்கும் இந்த கோவிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23-ந்தேதி வருகை தந்து சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அன்றைய தினம் காலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படும் அவர் பகல் 10.30 மணி அளவில் மதுரை வருகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் ஹெலிபேட் தளம் செல்கிறார்.
பின்னர் கார் மூலம் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லும் அவர் அங்கு தரிசனம் செய்து விட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி ராமேசுவரத்தில் தற்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நடராஜன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளம், அப்துல் கலாம் மணி மண்டபம் பகுதிகளில் அவர் ஆய்வு நடத்தினார்.
பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செல்ல உள்ள இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்தும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X