search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளையான்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை
    X

    இளையான்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

    இளையான்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாலைகிராமத்தைச் சேர்ந்தவர் நூர்ஷாதயா (வயது29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் சமது என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 30 பவுன் நகை, ரூ5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் நூர்ஷாதயா சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் எனது கணவர் அப்துல் சமது கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால் 2014-ம் ஆண்டு எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன்.

    ஆனாலும் அவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்கிறார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் அமர்கான்-பாத்திமாபீவி, உறவினர் ரகுமான் ஆகியோர் இருக்கின்றனர் என்று கூறி உள்ளார்.

    இதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி விசாரணை நடத்தி வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த அப்துல்சமது மற்றும் அவரது பெற்றோர், உறவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    Next Story
    ×