search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு: நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு: நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

    ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகர்கோவில்:

    ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் நாக ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஜெயசீலன், மணிமாறன், ஜான்சிலின் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். நிர்வாகிகள் தமிழ்செல்வன், சதீஷ் உள்பட திரளானவர்கள்  கலந்து கொண்டனர்.
    Next Story
    ×