search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரியில் திருமணமான 15 நாளில் புதுப்பெண் மாயம்
    X

    நாங்குநேரியில் திருமணமான 15 நாளில் புதுப்பெண் மாயம்

    திருமணமான 15 நாளில் புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முருகன் (வயது31). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவர் வீட்டில் இருந்த முத்துலட்சுமியை திடீரென்று காணவில்லை.

    இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் பல்வேறு இடங்களில் முத்து லட்சுமியை தேடினர். ஆனால் அவரை காணவில்லை.

    இதுகுறித்து புதுமாப்பிள்ளை முருகன், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

    இதனால் அந்த வாலிபர் முத்துலட்சுமியை கடத்தி சென்று இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×