search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கின்னஸ் சாதனைக்காக காஞ்சிபுரத்தில் 150 மணி நேர யோகா செய்யும் பெண்
    X

    கின்னஸ் சாதனைக்காக காஞ்சிபுரத்தில் 150 மணி நேர யோகா செய்யும் பெண்

    காஞ்சிபுரத்தில் கின்னஸ் சாதனைக்காக 150 மணி நேர யோகாசனம் செய்து காட்டி வருகிறார். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சனா. யோகா ஆசிரியராகவும், வக்கீலாகவும் உள்ளார். இவர் கடந்த ஆண்டு 57 மணிநேரம் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை நிகழ்த்தினார்.

    இந்நிலையில் இந்த சாதனையை அவரே முறியடிக்கும் வகையில் தொடர்ந்து 150 மணிநேரம் (6 நாட்களுக்கும் மேலாக) உணவு மற்றும் தூக்கத்தினை தவிர்த்து தொடர்ந்து யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்தார்.

    இன்று காலை சின்ன காஞ்சீபுரம் பங்காரு ஏசப்பன் தெருவில் உள்ள மகாயோக தியான மைய வளாகத்தில் யோகாசனத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து அவர் பல்வேறு யோகாசனங்கள் செய்து காட்டி வருகிறார். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து ரஞ்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    Next Story
    ×