search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக் மூலம் காதல் திருமணம்: தஞ்சை இளம்பெண் ‘திடீர்’ மாயம்
    X

    பேஸ்புக் மூலம் காதல் திருமணம்: தஞ்சை இளம்பெண் ‘திடீர்’ மாயம்

    வேதாரண்யம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பேஸ்புக் மூலம் தஞ்சையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் திவ்யா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மீண்டும் கண்ணன் வெளிநாடு சென்று விட்டார்.

    இந்நிலையில் திவ்யா செம்போடையில் உள்ள கணவர் கண்ணன் வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி காலை திவ்யாவின் மாமனார் பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து திடீரென திவ்யா காணாததைக் கண்டு பல இடங்களில் தேடிபார்த்தார். எவ்வித தகவலும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×