என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக் மூலம் காதல் திருமணம்: தஞ்சை இளம்பெண் ‘திடீர்’ மாயம்
Byமாலை மலர்26 Oct 2017 12:03 PM GMT (Updated: 26 Oct 2017 12:04 PM GMT)
வேதாரண்யம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் பேஸ்புக் மூலம் தஞ்சையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் திவ்யா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மீண்டும் கண்ணன் வெளிநாடு சென்று விட்டார்.
இந்நிலையில் திவ்யா செம்போடையில் உள்ள கணவர் கண்ணன் வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.
கடந்த 23-ந்தேதி காலை திவ்யாவின் மாமனார் பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து திடீரென திவ்யா காணாததைக் கண்டு பல இடங்களில் தேடிபார்த்தார். எவ்வித தகவலும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X