search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    ராஜபாளையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, அவரது மகன் ஜெய்ஷாவையும் கைது செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, அவரது மகன் ஜெய்ஷாவையும் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாலிங்கராஜா சக்தி மோகன், சங்குதுரை முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணை தலைவர் அய்யனார், குமாரசாமி ராஜா ஆகியோர் பேசினர்.

    மாவட்ட துணைத் தலை வர்கள் திருப்பதி, செல்வமணி, பாலகிருஷ்ணன், ராஜ்மோகன், பொருளாளர் கருப்பசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் செவராஜ், பிரபாகரன், ரமணி, மகேஸ்வரன், ஆறுமுகம், தொந்தியப்பன், ஜெகதீசன், எஸ்.சி-எஸ்.டி. பிரிவின் மாவட்ட செயலாளர் ராமர், சுடலையாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    Next Story
    ×