search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே கடையின் பூட்டை உடைத்து 48 செல்போன்கள் கொள்ளை
    X

    சிவகங்கை அருகே கடையின் பூட்டை உடைத்து 48 செல்போன்கள் கொள்ளை

    சிவகங்கை அருகே கடையின் பூட்டை உடைத்து 48 செல்போன்கள் கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் அருகே உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது 32). இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை பூட்டப்பட்டிருந்தது. நேற்று மதியம் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 செல்போன்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம் ஆகும்.

    நேற்று மாலையில் அருண் பாண்டியன் கடைக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது செல்போன்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அருண் பாண்டியன் சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
    Next Story
    ×