search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே வாலிபர் அடித்து கொலை
    X

    புதுவை அருகே வாலிபர் அடித்து கொலை

    புதுவை அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து சேதராப்பட்டுக்கு செல்லும் வழியில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டு பகுதி ஆரோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியாகும். ஆனால் இந்த பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்ளாததால் இந்த இடம் சமூக விரோதிகள் கூடாரமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் பன்றி இறைச்சி தயாரித்து விற்பனை செய்வதால் மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி வந்து இங்கு மதுகுடிப்பது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது தைலமர சறுகுகள் போட்டு மூடிய நிலையில் ஒரு வாலிபர் உட்கார்ந்து இருந்த படி பிணமாக கிடந்தார். பிணம் அழுகிய நிலையில் இருந்தது. தலையில் பலத்த காயம் காணப்பட்டது. உடல் அருகே ரத்தம் உறைந்து இருந்தது.

    பிணமாக கிடந்த வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். கத்தரிபூ கலரில் மேல்சட்டையும் , கால்சட்டையும் அணிந்து இருந்தார். அவர்யார்-எந்த ஊர் என்று தெரியவில்லை. மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபரை மர்ம நபர்கள் கல்லால் அடித்து கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க உடல் மீது தைல மர சறுகுகளை மூடிமறைத்து விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×