என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்
Byமாலை மலர்21 Sep 2017 12:30 AM GMT (Updated: 21 Sep 2017 12:30 AM GMT)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்துவருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: -
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை பெய்யவேண்டிய சராசரி மழை 277 மி.மீ. ஆனால் இந்த வருடம் பெய்த மழை 371 மி.மீ.ஆகும். அதாவது கூடுதலாக 34 சதவீத மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கூடலூர் பஜாரில் 8 செ.மீ. மழையும், நடுவட்டத்தில் 4 செ.மீ. மழையும், பூதப்பாண்டி, சின்னக்கல்லாறு தலா 2 செ.மீ. மழையும், பேச்சிப்பாறை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டம் பாபநாசம், நாகர்கோவில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்துவருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: -
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை பெய்யவேண்டிய சராசரி மழை 277 மி.மீ. ஆனால் இந்த வருடம் பெய்த மழை 371 மி.மீ.ஆகும். அதாவது கூடுதலாக 34 சதவீத மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கூடலூர் பஜாரில் 8 செ.மீ. மழையும், நடுவட்டத்தில் 4 செ.மீ. மழையும், பூதப்பாண்டி, சின்னக்கல்லாறு தலா 2 செ.மீ. மழையும், பேச்சிப்பாறை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டம் பாபநாசம், நாகர்கோவில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X