search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் குடிசை வீட்டில் தீ விபத்து
    X

    தஞ்சையில் குடிசை வீட்டில் தீ விபத்து

    தஞ்சையில் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள பிராந்தை மேலத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது குடிசை வீட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதுபற்றி தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×