என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிறந்த நாள் விழா: ஏழைகள்-விவசாயிகளுக்கு விஜயகாந்த் உதவி
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 65-வது பிறந்த நாளை (வெள்ளி) கொண்டாடுகிறார்.
விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். பிறந்த நாளை யொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
விவசாயிகள் 100 பேருக்கு தலா ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் ஆயுள் காப்பீட்டு திட்ட பாலிசியை விஜயகாந்த் வழங்கினார். ராமாவரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
கால் ஊனமுற்ற வாலிபர் ஒருவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர், மின்சாரம் தாக்கி பலியான திருவாலங்காட்டை சேர்ந்த தொண்டர் ஜெயகாந்த் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான டிராக்டரை மாவட்ட செயலாளரிடம் விஜயகாந்த் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த், மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்