என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை காலாப்பட்டு அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
Byமாலை மலர்20 Aug 2017 8:28 AM GMT (Updated: 20 Aug 2017 8:28 AM GMT)
புதுவை காலாப்பட்டு அருகே சாலை தடுப்பு கட்டையில் கார் மோதி கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேதராப்பட்டு:
கோவையை சேர்ந்தவர்கள் பிரவீன் (வயது 21), எழில் அமுதன் (21) மற்றும் சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (19), திருப்பூர் பகுதியை சேர்ந்த முகமது முக்தா (21), அரிபிரசாத் (19) மற்றும் விருத்தாசலம் அருகே பெரிய காட்டு முளை பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (20).
இவர்கள் 6 பேரும் கோவையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 6 பேரும் ஒரு காரில் புதுவைக்கு சுற்றுலா வந்தனர்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய முதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி புதுவையில் பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்தனர்.
நேற்று காலை இவர்கள் மகாபலிபுரத்துக்கு காரில் சென்றனர். பின்னர் இரவு ஓட்டலுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை விக்னேஸ்வரன் ஓட்டி வந்தார். இரவு 11.30 மணியளவில் காலாப்பட்டு அருகே கீழ்புத்துப்பட்டு- மஞ்சக்குப்பம் இடையே வந்த போது கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில், காரை ஓட்டி வந்த விக்னேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்து போனார். தொடர்ந்து மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையை சேர்ந்தவர்கள் பிரவீன் (வயது 21), எழில் அமுதன் (21) மற்றும் சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (19), திருப்பூர் பகுதியை சேர்ந்த முகமது முக்தா (21), அரிபிரசாத் (19) மற்றும் விருத்தாசலம் அருகே பெரிய காட்டு முளை பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (20).
இவர்கள் 6 பேரும் கோவையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 6 பேரும் ஒரு காரில் புதுவைக்கு சுற்றுலா வந்தனர்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய முதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி புதுவையில் பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்தனர்.
நேற்று காலை இவர்கள் மகாபலிபுரத்துக்கு காரில் சென்றனர். பின்னர் இரவு ஓட்டலுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை விக்னேஸ்வரன் ஓட்டி வந்தார். இரவு 11.30 மணியளவில் காலாப்பட்டு அருகே கீழ்புத்துப்பட்டு- மஞ்சக்குப்பம் இடையே வந்த போது கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில், காரை ஓட்டி வந்த விக்னேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்து போனார். தொடர்ந்து மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X