search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளிக்குடி அருகே விவசாயி மீது தாக்குதல்: சகோதரர் கைது
    X

    கள்ளிக்குடி அருகே விவசாயி மீது தாக்குதல்: சகோதரர் கைது

    கள்ளிக்குடி அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியதாக சகோதரர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட குராயூரைச் சேர்ந்தவர் மருதப்பன் (வயது60). இவரது சகோதரர் கிருஷ்ணன் (62). இவர்கள் 2 பேரும் அக்காள் தங்கையை திருமணம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இருவர் இடையேயும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அவர்களது மாமியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். இதற்கு கிருஷ்ணன் செல்லாததால் மருதப்பன் அவரிடம் கேட்டார்.

    அப்போது கிருஷ்ணன், துரைப்பாண்டி, மருதுபாண்டி, பின்னியம்மாள் ஆகியோர் மருதப்பனை தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்த்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×