search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே வாலிபர் கொலை
    X

    புதுவை அருகே வாலிபர் கொலை

    புதுவை அருகே வாலிபர் சரமாரி வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் வீரமணி. (வயது 24). பெயிண்டர் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆக வில்லை.

    வீரமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு நண்பர்களுடன் மது குடிக்க சென்றார்.

    அவர்கள் தமிழக பகுதியான சின்ன முதலியார் சாவடி தீப்பாய்ந்தான் கோவில் அருகே அமர்ந்து அவர்கள் மது குடித்தனர்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், வீரமணியை நண்பர்கள் சரமாரியாக வெட்டினார்கள். தலையில் 5-க்கும் மேற்பட்ட வெட்டுகள் விழுந்தது. இதில், தலை முற்றிலும் சிதைந்தது. அந்த இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.

    இதுபற்றிய தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவரை கொலை செய்த நண்பர்கள் யார் என்று இதுவரை தகவல் தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீரமணிக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது சம்பந்தமாக அவருக்கும், நண்பர்களுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாகத்தான் வீரமணியை ஏமாற்றி அழைத்து வந்து மதுகுடிக்க செய்து கொலை செய்ததாக கருதப்படுகிறது.

    வீரமணியின் தந்தையின் பெயர் குணசேகரன். 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதனால் தனது அக்காளின் பராமரிப்பில்தான் வீரமணி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×