search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    மீஞ்சூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    மீஞ்சூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வள்ளுவர் நகர், டி.எச். சாலையில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டேட் பாங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை.

    நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை உடைத்தனர். மேலும் ஏ.டிஎம். மையம் முழுவதும் மிளகாய் பொடியை தூவி தப்பி சென்று விட்டனர்.

    இன்று அதிகாலை அவ்வழியே சென்ற பொது மக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று மாலைதான் ஊழியர்கள் பணத்தை நிரப்பி உள்ளனர். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

    அப்பகுதியில் உள்ள வேறு கண்காணிப்பு கேமிராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×