search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தூர் அருகே திருமணம் ஆன 7 நாளில் இளம்பெண் தற்கொலை
    X

    மத்தூர் அருகே திருமணம் ஆன 7 நாளில் இளம்பெண் தற்கொலை

    மத்தூர் அருகே பெற்றோர் திட்டியதால் திருமணம் ஆன 7 நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஓபுளிகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் அனுபிரியா (வயது 18).

    இவருக்கும் மத்தூர் அருகே உள்ள ஓலப்பட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் மாதவன் என்பவருக்கும் கடந்த 7 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு தனது தந்தை வீட்டுக்கு அனுபிரியா கணவருடன் வந்தார். அப்போது பெற்றோர் திடீரென அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த அனுபிரியா கடந்த 11-ந்தேதி வீட்டில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தை சற்றும் எதிர்பார்க்காத பெற்றோர் உடனடியாக தீயை அனைத்து மகளை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    அனுபிரியாவுக்கும், மாதவனுக்கு திருமணம் நடந்து 7 நாட்கள் தான் ஆகிறது என்பதால் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. அருண் மற்றும் மத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×