search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயம் ம.தி.மு.க. பொருளாளர் வி‌ஷ மாத்திரை தின்று தற்கொலை
    X

    காங்கயம் ம.தி.மு.க. பொருளாளர் வி‌ஷ மாத்திரை தின்று தற்கொலை

    வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த காங்கயம் ம.தி.மு.க. பொருளாளர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 65). ம.தி.மு.க. பொருளாளர். இவர் தேங்காய் எண்ணை ஆலை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக கோவிந்தசாமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த கோவிந்தசாமி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தென்னை மரத்துக்கு பயன் படுத்தப்படும் மாத்திரையை தின்றார். வி‌ஷமாத்திரை தின்ற சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். இதைப்பார்த்த அவர்களது உறவினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×