என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் வெளுத்து கட்டிய மழை
மன்னவனூர்:
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கேரளாவிலும் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது.
கொடைக்கானலில் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நேற்று சுமார் 2 மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து கூடியுள்ளது.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பூண்டு விதைப்பு பணி தொடங்கியுள்ளது. இது தவிர உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பெய்த மழை விவசாயத்துக்கு போதுமானதாக இருக்கும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவ மழை தொடக்கத்திலேயே கொடைக்கானல் மேல்மலையில் மழை பெய்து வருவது நல்ல அறிகுறி என்று தெரிவித்தனர்.
இதே போல கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியிலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மற்ற கிராமங்களில் சாரல் மழை பெய்தபடி இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்