search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் வெளுத்து கட்டிய மழை
    X

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் வெளுத்து கட்டிய மழை

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மன்னவனூர்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கேரளாவிலும் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது.

    கொடைக்கானலில் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நேற்று சுமார் 2 மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து கூடியுள்ளது.

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பூண்டு விதைப்பு பணி தொடங்கியுள்ளது. இது தவிர உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பெய்த மழை விவசாயத்துக்கு போதுமானதாக இருக்கும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவ மழை தொடக்கத்திலேயே கொடைக்கானல் மேல்மலையில் மழை பெய்து வருவது நல்ல அறிகுறி என்று தெரிவித்தனர்.

    இதே போல கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியிலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மற்ற கிராமங்களில் சாரல் மழை பெய்தபடி இருந்தது.

    Next Story
    ×