என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு ஒரு வாரத்திற்குள் நிபந்தனையின்றி சேருங்கள்: ஓ.பி.எஸ். அணிக்கு நாஞ்சில் சம்பத் கெடு
Byமாலை மலர்22 May 2017 5:24 AM GMT (Updated: 22 May 2017 5:24 AM GMT)
மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு எவ்வித நிபந்தனையுமின்றி ஒரு வாரத்தில் எங்களுடன் சேர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நாஞ்சில் சம்பத் ‘கெடு’ விதித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்:
அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் பேசினர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியை பொலிவோடும், வலிமையோடும் வழிநடத்தி வருபவர் சசிகலா. துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்று இருப்பார். ஆனால் பொய் வழக்கு போட்டு அவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அதற்காக நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
தமிழகத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. களைத்து, இளைத்து விட்டது. அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில துரோகிகள் நமக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது.
ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு எவ்வித நிபந்தனையுமின்றி எங்களுடன் சேர வேண்டும். இல்லை என்றால் கட்சியை விட்டு சென்றுவிட வேண்டும்.
பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரது தலைமையில் தான் கட்சி செயல்படும். இதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் பேசினர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியை பொலிவோடும், வலிமையோடும் வழிநடத்தி வருபவர் சசிகலா. துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்று இருப்பார். ஆனால் பொய் வழக்கு போட்டு அவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அதற்காக நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
தமிழகத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. களைத்து, இளைத்து விட்டது. அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில துரோகிகள் நமக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது.
ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு எவ்வித நிபந்தனையுமின்றி எங்களுடன் சேர வேண்டும். இல்லை என்றால் கட்சியை விட்டு சென்றுவிட வேண்டும்.
பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரது தலைமையில் தான் கட்சி செயல்படும். இதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X