என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏரி, குளங்களில் உள்ள மணலை எடுத்துக்கொள்ளலாம்: தமிழக அரசின் அறிவிப்புக்கு குமரிஅனந்தன் வரவேற்பு
Byமாலை மலர்30 April 2017 3:39 AM GMT (Updated: 30 April 2017 3:39 AM GMT)
ஏரி, குளங்களில் உள்ள மணலை எடுத்துக்கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு குமரிஅனந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:
காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏரி, குளங்களில் தூர்வார வேண்டும் என்றும், அப்படி அகற்றும் களி மண்ணையும், சவுடு மண்ணையும் குறிப்பிட்ட அளவு விவசாயிகள் தமதாக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. மீதியுள்ள களிமண்ணை ஏரி, குளங்களின் கரைகளைப் பலப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். அந்தக் கரைப் பகுதியில் பனை விதைகளைப் புதைத்தால் அவை வளர்ந்து தமது வேர்களால் கரையைப் பலப்படுத்தும். எட்டடி வரை தான் பனை மரங்கள் வேர் விடுவதால் நீரை அதிகம் உறிஞ்சாது. ஓலைகள் பழுத்து விழுந்தாலும் நீர்ப்பரப்பில் இருந்து எளிதாக எடுத்துவிடலாம்.
மே மாதம் 1-ந் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மதுவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற துணை நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி தவிர அனைத்து கட்சியினரும் பூரண மதுவிலக்கை ஆதரிப்பதால் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளும் அரசும் உடனே முன்வர வேண்டும் என வேண்டுகிறேன். காந்தியின் கனவை நனவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏரி, குளங்களில் தூர்வார வேண்டும் என்றும், அப்படி அகற்றும் களி மண்ணையும், சவுடு மண்ணையும் குறிப்பிட்ட அளவு விவசாயிகள் தமதாக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. மீதியுள்ள களிமண்ணை ஏரி, குளங்களின் கரைகளைப் பலப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். அந்தக் கரைப் பகுதியில் பனை விதைகளைப் புதைத்தால் அவை வளர்ந்து தமது வேர்களால் கரையைப் பலப்படுத்தும். எட்டடி வரை தான் பனை மரங்கள் வேர் விடுவதால் நீரை அதிகம் உறிஞ்சாது. ஓலைகள் பழுத்து விழுந்தாலும் நீர்ப்பரப்பில் இருந்து எளிதாக எடுத்துவிடலாம்.
மே மாதம் 1-ந் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மதுவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற துணை நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி தவிர அனைத்து கட்சியினரும் பூரண மதுவிலக்கை ஆதரிப்பதால் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளும் அரசும் உடனே முன்வர வேண்டும் என வேண்டுகிறேன். காந்தியின் கனவை நனவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X