என் மலர்
ஆன்மிகம்
- மிதுனம் நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம்.
- சிம்மம் நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம்.
மேஷம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 9-ம் மிடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவருக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த பிரச்சினைகள் விலகும். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட தொல்லைகள் வீண் பழிகள் அகலும். சிலருக்கு புதியதாக ஆயுள் காப்பீடு செய்து கொள்வதில் ஆர்வம் கூடும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மேல் வீண் பழிகள் அகலும். அரசாங்க ஊழியர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி கிடைக்கும். ராசி அதிபதி செவ்வாய்க்கு பாதகாதிபதி சனி பார்வை இருப்பதால் பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களை ஒத்திப் போடுவது நல்லது. மூத்த சகோதரன் சித்தப்பா இவர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதால் வல்வினைகள் அகலும்.
ரிஷபம்
தன்னம்பிக்கை நிறைந்த வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். உங்கள் எண்ணங்கள், யோசனைகள் திட்டங்களை செயல்படுத்தக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாகும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். கடன் தொல்லை இழப்புகள், விரயங்கள் குறையும். தொழிலில் மூலம் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலை முயற்சி நிறைவேறும். பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். தாயின் அன்பும் ஆசிர்வாதமும் தாய் வழிச் சொத்தும் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிக்காக வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை இழுபறியாகும். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது நல்லது. குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.
மிதுனம்
நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு செவ்வாயின் நேரடி பார்வை உள்ளது. தன்னம்பிக்கை அதிகமாகும். தொழிலில் நிரந்தர தன்மை உண்டாகும். திறமையும் செயல் வேகமும் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முயல்வீர்கள். பொருளா தாரத்தில் சீரான, சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியைத் தரும். சிலர் வேலை மாறுதலாகி வேறு இடம் செல்ல வேண்டி வரும். வீடு கட்டும் முயற்சி மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றத்தால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக சகோதர, சகோதரி வகையில் நிலவிய மன உளைச்சல் அகலும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். திருமண முயற்சிகள் நிறைவேறும். விரும்பிய வரன் தேடி வரும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். குல தெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் நிறைந்த வாரமாக இருக்கும்.
கடகம்
விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் வக்கிரம் பெற்று நிற்கும் உச்ச குரு பகவான் வக்ரகதியில் 12-ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். சற்று நிதானமாக செயல்படுவதால் பெரிய நன்மைகளை அடைய முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கவும். தேவையற்ற வெளியூர் பயணங்களையும் வெளி உணவுகளையும் தவிர்த்தல் நலம். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இனி இல்லை என்ற நிலை இல்லை. பெற்றோருடன் ஏற்பட்ட மனத் தாங்கல் மாறும். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு சனி மற்றும் குரு பார்வை இருப்பதால் மெக்கானிக். இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெரிய தொழில் முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் நல்லாசி பெற அஷ்டம ராகுவின் தாக்கம் குறைந்து திருமண தடை அகலும்.
சிம்மம்
நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம். முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் ராசிக்கு 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நல்ல மாற்றங்கள் வரும். மண்மனை, பூமி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. சொத்துக்களால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு அரசின் சலுகையால் இருப்பிடம் கிடைக்கும். வியாபாரத்தில் தனித்தன்மையுடன் மிளிர்வீர்கள். தொழிலில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நேரம். சுய ஜாதகரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்க்க உகந்த காலமாகும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கலாம். அல்லது பண வரவு அதிகரிக்கும். சுவாமி ஐயப்பனை வழிபட சங்கடங்கள் தீரும்.
கன்னி
தர்மம் தலைகாக்கும் நேரம். ராசி அதிபதி புதன் தனாதிபதி சுக்ரனுடன் சேருவது தர்மகர் மாதிபதி யோகம். மாற்றமும் ஏற்றமும் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். அதிர்ஷ்டம், போட்டி, பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். தொழில் போட்டிகளை தாண்டி தனி முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த அரசாங்கத் தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். குடும்ப உறவுகளிடம் இணக்கம் உண்டாகும். ஆனால் விரயாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் வரவிற்கு மீறிய செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வாடகை வீட்டுப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி குடியேறுவீர்கள். உங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பங்குதாரர், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். தினமும் அபிராமி அந்தாதி படிப்பதால் கண்டகச் சனியால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
துலாம்
வளர்ச்சிகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் சேர்ந்துள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தைரியம், தன்நம்பிக்கை அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் தொடங்கப்போகிறது. திருமணத்தடை அகன்று நல்ல வரன் பற்றிய தகவல் கிடைக்கும். அயல் நாட்டிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள். குடும்பத்தில் காரணமின்றி நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தன வரவு மட்டற்ற மகிழ்ச்சி தரும். கடன் தொல்லை குறையும். செவ்வாய்க்கும் சனிக்கும் சம்பந்தம் இருப்பதால் சிலருக்கு தொழில் கூட்டு பிரியும். அல்லது நம்பியவர்களால் ஏமாற்றம், மன வருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. வரலாற்று புகழ்மிக்க ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தினமும் லலிதா சகஸ்ர நாமம் படிப்பதால் எண்ணங்கள் ஈடேரும்.
விருச்சிகம்
நம்பிக்கைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்பஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு குரு மற்றும் சனி பார்வை கிடைப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு, கடும் விரோத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உங்களின் செயல்பாடுகள் வெற்றியில் முடியும். நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய அறிகுறிகள் தென்படும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறையும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். தந்தையால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். பூர்வீகச் சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படும். புதிய தொழில் முதலீடுகளை மனைவி பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி பெறும். 7.12.2025 அன்று இரவு 10.38 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் இனம்புரியாத கவலை குழப்பம் உண்டாகலாம். வேலையாட்களால், உடன் பணிபுரி பவர்களால் மன சங்கடம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவகிரக செவ்வாயை வழிபடலாம்.
தனுசு
திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசியில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. தொழில் வளர்ச்சியில் நிலவிய இடையூறுகள் அகலும். குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வருமானம் வரத்துவங்கும். தொழில் உத்தியோக ரீதியான சில நேர்மறை சம்பவம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. சிலருக்கு வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். காதல் திருமணம் கைகூடும். இந்த வாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவதால் வெற்றி நிச்சயம் உண்டாகும். தடைபட்ட திருமணம் நடந்து முடியும். பொறுப்பு மிக்க பதவிகள் தேடி வரும். ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். 7.12.2025 அன்று இரவு 10.38 முதல் 10.12.2025 அன்று அதிகாலை 2.23 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் மாமனார் அல்லது மைத்துனர்கள் வழியில் மனக்கசப்புகள் ஏற்படலாம். உறவுகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான பலனை அடைய முடியும்.
மகரம்
மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம். வக்ர நிவர்த்தி பெற்ற ராசி அதிபதி சனி பகவான் சகாய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எண்ணங்கள் ஈடேறும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விரய ஸ்தானத்தை சனி மற்றும் குரு பார்ப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பணவரவும் சேமிப்பும் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.10.12.2025 அன்று அதிகாலை 2.23 முதல் 12.12.2025 அன்று பகல் 10.20 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். பண விவகாரங்கள் கவலை தரும். பொறுமையோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட மிகுந்த நன்மைகள் உண்டாகும்.
கும்பம்
நன்மையும், மேன்மையும் உண்டாகும். வாரம். ராசியில் உள்ள ராகுவுக்கு குருவின் வக்கிர பார்வை உள்ளது. தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டாகும். தொழில், உத்தியோகத்திற்காக அலைச்சல் மிகுந்த வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தைத் தேடுபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை சனிபகவான் கற்றுக் கொடுப்பார். ஜென்ம ராகுவால் மனதில் அவ்வப்போது தேவையற்ற சில சந்தேகங்களும் கற்பனை பயமும் உண்டாகலாம். சில தம்பதிகள் குறுகிய காலம் தொழில், உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். சிலரின் காதல் தோல்வியில் முடியும். பல் சீரமைப்பு செய்ய ஏற்ற காலம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் விலை உயர்ந்த பொருளை ஆன்லைனில் வாங்கி ஏமாறுவார்கள். 12.12.2025 அன்று பகல் 10.20-க்கு சந்திராஷ்டம் ஆரம்பிப்பதால் கொடுக்கல், வாங்கலில் ஏமாற்றங்களைச் சந்திக்கலாம். மன உளைச்சலை தவிர்க்க அமைதியை கடைபிடிக்கவும். நவகிரகங்களை வழிபடவும்.
மீனம்
சாதகமான வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் ஜென்மச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிரி, போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் குறையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வீடு மாற்றும் எண்ணம் நிறைவேறும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். விவசாயிகளுக்கு மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு பணியாளர்களால் அசவுகரியம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும்.ஸ்ரீ ராமர் வழிபாட்டால் சுப செய்திகள் தேடி வரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். சேமிக்க முற்படுவீர்கள். தொழிலில் லாபம்.
ரிஷபம்
சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. கடன்பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் தனித்திறமை வெளிப்படும்.
மிதுனம்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும். நண்பர்கள் வாயிலாக நல்ல தகவல் கிடைக்கும்.
கடகம்
வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். உடல் நலனில் கவனம் தேவை. வீடு மாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
வரவை விடச் செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் செயலில் குறை கண்டுபிடிப்பர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள்.
கன்னி
சந்தோஷமான நாள். கல்யாண முயற்சி கைகூடும். பழைய வாகனத்தைக்கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.
துலாம்
சொந்த பந்தங்களால் வந்த துயர் மறையும் நாள். குடும்பச்சுமை கூடும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
விருச்சிகம்
கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.
தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்தமுயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
கும்பம்
புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும். அலைபேசி வழியில் உத்தியோகம் பற்றிய நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் லாபம் உண்டு.
மீனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அகலும்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-21 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை இரவு 11.23 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.41 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சிபுரம், இருக்கன்குடி, சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர் அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி வரும் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் திருவீதியுலா.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-வெற்றி
கடகம்-பயணம்
சிம்மம்-உண்மை
கன்னி-திடம்
துலாம்- உறுதி
விருச்சிகம்-வெற்றி
தனுசு- லாபம்
மகரம்-நன்மை
கும்பம்-நிறைவு
மீனம்-தெளிவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்யும் நாள். செலவுகள் கூடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
ரிஷபம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பண நெருக்கடி உண்டு.
மிதுனம்
யோகமான நாள். சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும். அரசுவழிக் காரியங்களில் அனுகூலம் உண்டு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிட்டும்.
கடகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற வீட்டுப் பராமரிப்புப் பணியைத் தொடருவீர்கள்.
சிம்மம்
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத்தகவல் வந்து சேரும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
புகழ்மிக்கவர்களின் பழக்கம் ஏற்படும். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம் உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம்
முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். வரவை விடச் செலவு கூடும்.
தனுசு
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளைச் செய்து முடிப்பீகள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மகரம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்.
கும்பம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும்.
மீனம்
நினைத்தது நிறைவேறும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைப் பெருக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை.
- திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-20 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை நள்ளிரவு 1.14 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : மிருகசீர்ஷம் நண்பகல் 12.03 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை, திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை. திருவண்ணாமலை ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்ப உற்சவம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருவீதி உலா. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-ஆசை
மிதுனம்-தனம்
கடகம்-பக்தி
சிம்மம்-பணிவு
கன்னி-பண்பு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-உயர்வு
தனுசு- விவேகம்
மகரம்-சாந்தம்
கும்பம்-நன்மை
மீனம்-பரிசு
நமக்கு விருப்பமான கடவுள்கள் ஏராளமாக இருந்தாலும், நாம் முதற் கடவுளாக வணங்க வேண்டியது விநாயகரையும், குலதெய்வத்தையும் தான்.. இவர்களை வணங்கிய பிறகே பிற கடவுள்களை வணங்குவது தான் சரியான முறையாகும்..
ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்..
குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாமா? என்று பலருக்கும் சந்தேகங்கள் உண்டு.
ஆம்.. குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாம் அதற்கு தேவையானது ஒரு மண் குடுவை, மற்றும் தீபம் ஏற்றும் விளக்கு.
முதலில் மண் குடுவையையும் விளக்கையும் நீரில் நன்கு சுத்தம் செய்து, துடைத்துவிட்டு பின்னர் குடுவையின் மஞ்சள் பூசி, அவரவர் குடும்ப வழக்கப்படி பட்டை அல்லது நாமமிட்டு அதனுள் பாதி குடுவை நிறையும் வரை தவிடு சேர்க்கவும்..
பிறகு, ஒரு வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் 27 அல்லது 29 ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் ஒரே மாதிரியான ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து அதனை கட்டி முடித்துவிட்டு அதன் மீது ஒரு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அதன் மீது ஒரு வாசனை பூவை வைத்து அந்த மண் பானைக்குள் வைத்து விடுங்கள்..
பிறகு இந்த மண் குடுவையை பித்தளை தட்டில் வைத்து அதனை சுற்றி வாசனை மலர்களை வையுங்கள்..
குடுவையின் மேல் தட்டை வைத்து மூடி, அதன் மீது விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி அல்லது பஞ்சு திரி போட்டு தீபமேற்றி வீட்டின் பூஜை அறையில் குபேர மூலையில் வைத்து வழிபட வேண்டும்.
வாரம் ஒரு முறை இந்த விளக்கை ஏற்றி வர வேண்டும். இந்த மண் குடுவையும் அதன் மீது நாம் வைக்கும் விளக்கையும் குடுவைக்குள் போடும் தவிட்டையும் வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
மாற்றும்போது பழைய குடுவை மற்றும் விளக்கை ஆற்றில் விட்டுவிட வேண்டும். ரூபாய் நாணயங்களை குலதெய்வ உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
ஏதேனும் நமக்கு வேண்டுதல் இருப்பின் அதனை மனதில் நினைத்துக்கொண்டு 5 வாரங்கள் சனிக்கிழமை காலை வேளையில் தீபம் ஏற்றி வந்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் கைக்கூடும்..
- ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது.
- சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. முதலில் தினமும் ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் உடனடி முன்பதிவு மூலமாக தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. இதனால் சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க, உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இதனால் சபரிமலை, பம்பை மற்றும் மலைப்பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டபடியே இருந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரினத்துக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
ஐகோர்ட்டு அறிவுறுத்தலின் படி நெரிசல் எதுவும் இல்லாத நேரத்தில் உடனடி முன்பதிவு பக்தர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கூட்ட நெரிசல் எதுவும்இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் அதிக அளவிலான பக்தர்கள், முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்துக்கு சரியாக வருவதில்லை. பலர் தங்களின் பயணத்தை நிறுத்தியிருந்தாலும், பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்த நேரத்தில் வராமல் காலதாமதமாக வருகிறார்கள்.
அவ்வாறு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்வற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், அது போன்று வரக்கூடிய பக்தர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் இருக்கக்கூடிய பக்தர்களில் பலர், வெளி மாநில பக்தர்கள் ஆவர்.
அவர்கள் வரக்கூடிய ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது. இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய பக்தர்களை தேதி மற்றும் நேரத்தை பார்க்காமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றும் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் ஏராளமானோர் சபரிமலைக்கு வரவில்லை. இதனால் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் இன்று காலை குறைவாகவே காணப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு 16,989 பக்தர்களே மலையேறிச் சென்றனர்.
இதன் காரணமாக சன்னிதானம் அருகே பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்பு உள்ள நடைப்பந்தலில் இரண்டு வரிசையில் மட்டுமே பக்தர்கள் காத்து நின்றனர். சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர். இதனால் பதினெட்டாம் படியில் பக்தர்கள் வேகமாக ஏறிச் செல்லாமல், பொறுமையாக ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- சந்திரசேகரர் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- அண்ணாமலையார் கிரிவலத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் வழிபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று முன்தினம் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீப தரிசன நாளில் அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலையில் அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
சந்திரசேகரர் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலை உண்ணாமலை சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்றார்.
பவுர்ணமி தினத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தது கூடுதல் சிறப்பாகும். அண்ணாமலையார் கிரிவலத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் வழிபட்டனர்.
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு என அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருவது வழக்கமாகும்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-19 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பின்னிரவு 3.19 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.32 வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம் : மரண / சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி பரை. மாலை 5 மணி முதல் 8 மணி வரை
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தாகுசாம்பிகை புறப்பாடு
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி உற்சவாரம்பம். திருப்பாணாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தாகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரலிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம் பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-பெருமை
மிதுனம்-இன்பம்
கடகம்-ஒற்றுமை
சிம்மம்-வாழ்பு
கன்னி-பரிசு
துலாம்- நன்மை
விருச்சிகம்-சலனம்
தனுசு- உழைப்பு
மகரம்-இன்பம்
கும்பம்-ஆர்வம்
மீனம்-கடமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்துதவுவீர்கள். வெளியுலகத் தொடர்பும் விரிவடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
கல்யாண முயற்சி கை கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும்.
கடகம்
அலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வேலைப்பளு கூடும். குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல் கொடுக்கல்கள் ஆதாயம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சி லாபம் தரும். ஆரோக்கியக் குறைபாடுகள் படிப்படியாக மாறும். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தென்படும்.
மகரம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
கும்பம்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
மீனம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாகத் தீட்டிய திட்டம் நிறைவேறும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திருமண முயற்சி கைகூடும்.
- 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
- நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 13-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
நாட்டுப் பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். தொழில் ரீதியாக சிலர் உங்களைத் தொடர்பு கொள்வீர்கள்.
ரிஷபம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
யோகமான நாள். அதிகாலையிலேயே அலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். தொலைபேசி வழியில் நல்ல செய்தி வந்துசேரும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னி
வீண்பழிகள் அகலும்நாள். வியாபார விருத்தியுண்டு. கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது.
துலாம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்தையும் இப்போதே செய்வோமா பிறகு செய்வோமா என்றுயோசிப்பீர்கள். நண்பர்கள் மீது நம்பிக்கை குறையும்.
விருச்சிகம்
புதியபாதை புலப்படும் நாள். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். மாற்றினத்தவர்கள் மூலம் மனதிற்கினிய செய்தி கிடைக்கும்.
தனுசு
தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். கூட்டுத்தொழிலில் லாபம்உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
கும்பம்
பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தேகநலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.
மீனம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கற்றவர்களின் பாராட்டுக்களால் கனிவு கூடும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.






