search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹயக்ரீவர்"

    • நாகலாபுரம் தலம் 4 வேதங்களும் மீண்டும் திரும்ப கிடைக்கப்பெற்ற தலமாகும்.
    • எனவே இந்த தலம் ஞானம் தரும் தலமாக கருதப்படுகிறது.

    நாகலாபுரம் தலம் 4 வேதங்களும் மீண்டும் திரும்ப கிடைக்கப்பெற்ற தலமாகும்.

    எனவே இந்த தலம் ஞானம் தரும் தலமாக கருதப்படுகிறது.

    அதை உணர்த்தும் வகையில் ஆலய பிரகாரத்தில் ஹயக்கிரீவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    கல்வியில் குறை இருக்கும் மாணவர்கள் இங்கு வந்து ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பலன் பெறுகிறார்கள்.

    குறிப்பாக பவுர்ணமி தினத்தன்று காலை 8 மணிக்கு ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    • ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம் பஞ்சமுக ஆஞ்சநேயர் பதம் பணிய இதமாகும்
    • வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம் பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்

    பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பக்தியுடன் தொழுதிடவே

    அஞ்சுவது ஏதுமின்றி அருள்தந்து காத்திடுவார்

    வராகம் ஒருமுகம் வடக்குமுகம் பார்த்திருக்கும்

    வராது இடரெல்லாம் வரந்தந்து காத்திருக்கும்

    நரசிம்மம் ஒருமுகமாம் நல்லருள் புரிந்திருக்கும்

    சிரமதிசை நீக்கிவிடும் தெற்குமுகம் பார்த்திருக்கும்

    ஹயக்ரிவர் ஒருமுகமாம் மேல்முகம் பார்த்திருக்கும்

    சகலகலா பாண்டித்யம் சந்தோஷம் தந்துவிடும்

    கருடனும் ஒருமுகமாம் கடிய விஷம் நீக்கும்

    உருவான மேற்குமுகம் உற்றுநோக்கும் திருமுகமாம்

    ஆஞ்சநேயர் ஒருமுகமாம் ஐந்தாவது திருமுகமாம்

    வஞ்சனை விரோதங்கள் வரட்டு குரோதங்கள்

    பில்லி சூனியங்கள் பெரும்பகை அகற்றிவிடும்

    உள்ளமெல்லாம் நிறைந்திருந்து உற்றதுணை ஆகிவிடும்

    கிழக்கு முகம் பார்த்திருக்கும் கேடின்றிக் காத்திருக்கும்

    வழக்குகள் வெற்றிதரும் வாழ்விலும் வெற்றிதரும்

    கன்னிமார் கல்யாணக் காலங்கள் கைகூடும்

    எண்ணம்போல் மழலைகள் எழிலாகத் தோற்றுவிக்கும்

    பஞ்சமுக ஆஞ்சநேயர் பதம் பணிய இதமாகும்

    கொஞ்சிவரும் செல்வங்கள் கோடி கோடி நலமாகும்

    ஐந்துமுக ஆஞ்சநேயர் அனுதினமும் அருள்தரவே

    சென்தூரப்பொட்டுமிட்டு' சிந்தனைகள் ஒன்றாக்கி

    வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம்

    பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்

    வெற்றிலை சுருளோடு வடையில் மலைகளும் சுற்றியே

    சாத்திடுவோம் பற்று நாம் கொண்டிடுவோம்

    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம.

    • வராகர் முகம் சகல தரித்திரமும் நீங்கி மங்களகரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.
    • ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    1. கிழக்கு முகம் - ஹனுமார் பிரதிவாதி சத்ரு உபத்திரவம் நீங்கும.

    2. ஹயக்ரீவர் குதிரை முகம் ஜன வசீகரணம் வாக்குசித்தி வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.

    3. நரசிம்மம் சிங்கமுகம் சகல வித பய தோஷங்களும் பூத ப்ரேத துர்தேவதா தோஷங்களும் நீங்கும்.

    4. வராகர் முகம் சகல தரித்திரமும் நீங்கி மங்களகரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.

    5. கருடன் முகம் சகல விஷஜ்வர சரீர ரோகங்கள் நீங்கும் சகல விதமான தோஷங்களம் நீக்கப்பட்டு மேன்மை பெறலாம். ஸ்ரீ பஞ்சமுப ஆஞ்சநேயரை சேவித்தால் நவகிரஹ தோஷங்களம் நீங்கும்.

    என்றும் நமக்கு வேண்டியது பலம் ஆத்மபலம் மனோபலம் புத்திபலம் தேகபலம் பிராணபலம் சம்பத்பலம் இந்த ஆறு பலங்களையும் பெற்று வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாட்சம் அவசியம். ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    அனுமன் மகாபலிஷ்டன் அஞ்சனாகுமாரன் ராமேஷ்டன் வாயுபுத்திரன். அர்ஜுன சகன் அமிதபாராக்ரமன மாருதி சுந்தரன பிங்காட்சன ஆஞ்சநேயன மாருதிராயன சஞ்சீவராயன் பஜ்ரங்பலி ஸ்ரீராமதாசன அனுமந்தையா ஆஞ்சநேயலு மகாவீர் போன்ற பல நாமங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உண்டு.

    ஸ்ரீ அனுமான் பஞ்சபூதங்களை மட்டுமா? பஞ்சேந்திரியங்களையும் கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியம் 5 இவைகளையும் வசப்படுத்தியவர்.

    • சிவன் தன் நெற்றிக்கண்ணையே கொடுத்தார்.
    • எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர்.

    இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷி வரவேற்று ஆசி கூற ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டி லட்சுமணன் ஆஞ்சநேயர் ஆகியோர் தங்கினர்.

    அப்போது அங்கு திரிகால ஞானியான நாரதர் வந்து சேர்ந்தார். நாரதரை வணங்கி ஸ்ரீராமருக்கு ஆசி கூறிய நாரதர் ராமா முக்கியமான விஷயமாகவே உன்னை சந்திக்க வந்தேன். இலங்கை யுத்தம் முடிந்தாலும் அது இன்னமும் முற்றுப் பெறவில்லை. உனது வில்லுக்கு இன்னமும் வேலை உள்ளது என்று கூற திகைத்த ஸ்ரீராமர் 'நாரத மகரிஷியே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? விளக்கமாக கூறுங்கள் என்று வேண்டினார்.

    ராமா! ராவணன் அழிந்தாலும் அரக்கர்கள் வாரிசுகள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்கு பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். ரக்த பிந்து ரக்த ராட்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். இவர்கள் தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள். பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும். எனவே இவர்களை நீ உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்' என நாரதர் கூறினார்.

    மகரிஷியே நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் இப்போது நான் அயோத்தி செல்வதில் தாமதிக்க இயலாது. குறிப்பிட்ட நாளில் நான் அயோத்தி செல்லாவிடில் தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டுவிடுவான் என ராமர் கூற 'அப்படியானால் சரி உனக்கு பதில் தம்பி லட்சுமணனை அனுப்பு என நாரதர் கூற அவன் என் நிழல் ஆயிற்றே என்னை விட்டு பிரிய மாட்டான் என்று சபதம் செய்துள்ளானே என்ற ராமர் கண்களில் அனுமார் பட அனுமாரை அழைத்தார் 'அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.

    அரக்கர்களின் ஆணிவேரை அழிக்கும் யுத்தமல்லவா? தேவர்கள் வாழ்த்தினர். திருமால் சங்கு சக்கரத்வீயும தனது அவதாரமான ஸ்ரீஹயக்கிரீவா, ஸ்ரீநரசிம்மா, ஸ்ரீவராஹர், ஸ்ரீகருடன் ஆகிய அவதாரத்தையும் வழங்க பிரம்மா கபாலத்தை வழங்க தேவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தந்திட ஆஞ்சநேயர் 10 கரங்களுடன் காட்சி தந்தார். விரைவாக செல்ல கருடன் தனது சிறகுகளை தந்தான்.

    அனுமார் புறப்படும் நேரம் சிவபெருமான் வந்து சேர்ந்தார். 10 கரங்கள் 10 கரத்திலும் ஆயுதங்கள். எதை தருவது? பார்த்தார் சிவன் தன் நெற்றிக்கண்ணையே தந்துவிட்டார். மூன்று கண்கள் 10 கரங்களுடன் புறப்பட்ட வீர தீரம் நிறைந்த ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் வாழ்வில் வளங்கள் பல பெற்று வாழலாம்.

    1. ஹயக்ரீவர் - எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர். அவருடைய அம்சமாக சகல விதமான ஞானத்தையும் பெற்ற அறிவாளி ஹனுமான். அவருடைய சிறந்த ஞானத்தை ராமனே வியந்து பாராட்டுகிறான். இவன் ருக்வேதம். யஜுர் வேதம், சாம வேதம் இவற்றை பரிபூரணமாக அறிந்தவன். இலக்கணங்களை நன்றாகக் கற்றவன். இவன் பேச்சில் குறைபாடு ஒன்றுமே இல்லை. மிக விஸ்தாரமாகவும் மிகவும் சுருக்கமாகப் பேசி அளவோடு நிதானமாக மதுரமான குரலில் வார்த்தைகளை பேசும் ஆற்றல் அனுமானிடம் உள்ளது.

    2. வராஹர் - மஹாவிஷ்ணுவின் வாராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று பூமி தேவியைக் கண்டுபிடித்து இரண்யாஷணியிடம் இருந்து தேவியை மீட்டார். ஹனுமானும் யாரும் செல்ல முடியாத இலங்கைக்கு சென்று சீதையை கண்டுபிடித்து ராவணனிடம் இருந்து மீட்பதற்கு உதவினார்.

    3. நரசிம்மர் - தம்முடைய பக்தனான பிரகலாதனுக்கு தீங்கு விளைவித்த இரண்யனை ஆக்ரோஷத்துடன் சம்ஹாரம் செய்தார். இங்கே தம்முடைய தெய்வமான சீதாதேவிக்கு தீங்கு விளைந்ததற்காக மாருதி ராவணனுடைய சேனை சேனாதிபதிகளை மந்திரிக்குமாரர்கள் முதலானோரை வதம் செய்து இலங்கையையும் எரியச் செய்தார்.

    4. கருடன் - பஷிகளுக்கெல்லாம் தலைவனாக கருடன் போற்றப்படுகிறார். பஷிராஜன் என்றே அவருக்குப் பெயர். ஆகாயத்தில் எல்லா உலகங்களாலும் எங்கும் பறக்கும், வல்லமை படைத்தவர். அவருடைய அம்சமாக அவருடைய சக்தியால்தான் அனுமான் பெருங்கடலை கடந்து இலங்கையை அடைந்தார். மீண்டும் கருடனைப் போலவே ஆகாய மார்க்கமாக கடலைக் கடந்து ராமனிடம் வந்து சேர்ந்தார்.

    இப்படி நால்வருடைய அம்சமும் சக்தியும் கொண்டவர் ஹனுமான். இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த நால்வரோடு ஹனுமானையும் சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று விசேசமாக கொண்டாடுகிறோம்.

    ஈரேழுலோகங்கள் தோன்றி அழிந்து போனாலும் நீ மட்டும் இன்று போல் என்றும் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று பன்முறை வாக்கு சாதுர்யம் பெற்றவர்.

    • வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாஷம் அவசியம்.
    • ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    1. கிழக்கு முகம் - ஹனுமார் பிரதிவாதி சத்ரு உபத்திரவம் நீங்கும்.

    2. ஹயக்ரீவர் குதிரை முகம் - ஜன வசீகரணம் வாக்குசித்தி வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.

    3. நரசிம்மம் சிங்கமுகம் - சகல வித பய தோஷங்களும் பூத ப்ரேத துர்தேவதா தோஷங்களும் நீங்கும்.

    4. வராகர் முகம் - சகல தரித்திரமும் நீங்கி மங்கள கரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.

    5. கருடன் முகம் - சகல விஷஜ்வர சரீர ரோகங்கள் நீங்கும் ஸகல விதமான தோஷங்களும் நீக்கப்பட்டு மேன்மை பெறலாம். ஸ்ரீ பஞ்சமுப ஆஞ்சநேயரை சேவித்தால் நவகிரஹ தோஷங்களும் நீங்கும்.

    என்றும் நமக்கு வேண்டியது பலம் ஆத்மபலம், மனோபலம், புத்திபலம், தேகபலம், பிராணபலம், சம்பத்பலம் இந்த ஆறு பலங்களையும் பெற்று வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாஷம் அவசியம். ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    அனுமன், மகாபலிஷ்டன், அஞ்சனாகுமாரன், ராமேஷ்டன், வாயுபுத்திரன், அர்ஜுன சகன், அமிதபாராக்ரமன மாருதி, சுந்தரன, பிங்காட்சன, ஆஞ்சநேயன, மாருதிராயன, சஞ்சீவராயன், பஜ்ரங்பலி, ஸ்ரீராமதாசன, அனுமந்தையா, ஆஞ்சநேயலு, மகாவீர் போன்ற பல நாமங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உண்டு. ஸ்ரீ அனுமான் பஞ்சபூதங்களை மட்டுமா? பஞ்சேந்திரியங்களையும் கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியம் 5 இவைகளையும் வசப்படுத்தியவர்.

    • சரஸ்வதிக்கே, குருவாக திகழ்பவர், ஹயக்ரீவர்.
    • ஹயக்ரீவரை ஞானத்தின் அதிபதியாக புராணங்கள் சொல்கின்றன.

    செல்வம் என்றாலே அது அழியும் ஒன்றுதான். அழியாத செல்வமாக இந்த உலகத்தில் இருப்பது கல்வி மட்டுமே. ஒருவரிடம் இருந்து தட்டிப்பறிக்க முடியாத விஷயமாகவும் கல்விதான் இருக்கிறது. அந்த கல்வியின் அதிபதியாக இருப்பவர், சரஸ்வதி தேவி. அந்த சரஸ்வதிக்கே, குருவாக திகழ்பவர், ஹயக்ரீவர். இவரை ஞானத்தின் அதிபதியாக புராணங்கள் சொல்கின்றன.

    பிரம்மதேவர் படைப்புத் தொழிலின் அதிபதி. அவர் நான்கு வேதங்களின் துணை கொண்டு அந்தப் பணியை செய்து வந்தார். அந்த நான்கு வேதங்களையும், குதிரை வடிவில் வந்த மது, கைடபர் என்ற அசுரர்கள் திருடிச் சென்றனர். இதனால் பிரம்மனின் படைப்பு தொழில் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இதையடுத்து பிரம்மதேவர், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்.

    அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்க நினைத்த மகாவிஷ்ணு தானும், குதிரை முகம் கொண்டவராக அவதாரம் பூண்டார். குதிரை முகம், மனித உடல், இரு கண்களாக சூரியன்-சந்திரன், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதியை பெற்றிருந்தார். அவரது உடல் முழுவதும் சூரியனை விடவும் பன்மடங்கு ஒளி பொருந்தியதாக பிரகாசித்தது.

    அசுரர்களுடன் போரிட்டு அவர்களிடம் இருந்து வேதங்களை மீட்டு வந்தார், ஹயக்ரீவர். ஆனால் போரின் உக்கிரம் அவரது உடலை விட்டு தணியாமல் இருந்தது. இதையடுத்து தேவர்கள் அனைவரும், லட்சுமி தேவியை ஹயக்ரீவரின் மடியில் அமரச் செய்தனர். இதையடுத்து கோபம் தணிந்த அவர் 'லட்சுமி ஹயக்ரீவர்' என்று அழைக்கப்பட்டார்.

    அசுரர்களின் கைபட்டதால், தங்களின் பெருமை குன்றியதாக வேதங்கள் கருதின. எனவே தங்களை புனிதமாக்கும்படி அவை, ஹயக்ரீவரிடம் வேண்டின. இதையடுத்து ஹயக்ரீவர், நான்கு வேதங்களையும் உச்சி முகர்ந்தார். இதனால் அவை புனிதமாக மாறின. வேதங்களையே மீட்டு வந்தவர் என்பதால் ஹயக்ரீவர், ஞானத்திற்கும், கல்விக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வமும் சேரும் என்பதாலேயே, ஹயக்ரீவர் தன்னுடைய மடி மீது லட்சுமி தேவியை அமர்த்தியிருப்பதாகவும் காரண காரியம் சொல்லப்படுகிறது.

    சரஸ்வதியோடு சேர்த்து அவருடைய குருவான ஹயக்ரீவரையும் வணங்கி வந்தால், படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியாகும் என்பது ஐதீகம். பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஏலக்காய் மாலை அணிவித்து, நோட்டு, பேனாவை பூஜையில் வைத்து வணங்க வேண்டும். தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தேனை படிக்கும் பிள்ளைகளின் நாக்கில் தடவி, ஹயக்ரீவரின் மந்திரத்தை உச்சரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.

    மந்திரம்

    ஞானானந்தமயம் தேவம்

    நிர்மல ஸ்படிகாக்கிருதிம்

    ஆதாரம் ஸர்வவித்யானாம்

    ஹயக்ரீவ முபாஸ்மஹே

    பொருள்:- ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவரும், எந்த மாசும் இல்லாத ஸ்படிக மணியைப் போன்ற திருமேனியைப் பெற்றவரும், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்குபவரும், குதிரை போன்ற திருக்கழுத்தைக் கொண்டவருமான ஹயக்ரீவ பெருமாளை வணங்குகிறோம்.

    ×