என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி கடந்த ஆண்டில் 8,000 சிறார்கள் பலி
Byமாலை மலர்6 Oct 2017 11:57 PM GMT (Updated: 6 Oct 2017 11:57 PM GMT)
கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த போர்களில் சிக்கி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ கட்ரஸ் கூறியுள்ளார்.
நியூயார்க்:
கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த போர்களில் சிக்கி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ கட்ரஸ் கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி பலியான சிறார்கள் குறித்த அறிக்கையை ஐ.நா தலைவர் அண்டோனியா கட்ரஸ் நேற்று வெளியிட்டார். அதில், கடந்த ஆண்டு மட்டுமே எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் இது போன்ற சண்டைகளில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானில் மட்டும் 3,512 சிறார்கள் சென்ற ஆண்டு பலியாகியுள்ளனர். இது மொத்த சிறார் பலி எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். ஆப்கானிஸ்தானின் சரித்திரத்திலேயே இதுதான் மிக அதிகமான சிறார் பலி எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அது போலவே, அப்பாவிச் சிறார்களை ஆயுதம் ஏந்தச் செய்து சண்டையில் ஈடுபடுத்துவதும் நடைபெற்று வருவது வேதனைக்குரியது என கட்ரஸ் தெரிவித்தார். சோமாலியா மற்றும் சிரியாவில் சிறார்களை ஆயுதமேந்தச் செய்யும் நடவடிக்கை முந்தைய 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
தெற்கு சூடானில் சென்ற ஆண்டு நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களில் 1,022 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். அங்கு ஆயுதமேந்திய சண்டைக் குழுக்கள் மட்டுமல்லாமல், அரசே சிறார்களை ராணுவத்தில் ஈடுபடுத்தியது வேதனை அளிப்பதாக கட்ரஸ் பேசினார்.
கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த போர்களில் சிக்கி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ கட்ரஸ் கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி பலியான சிறார்கள் குறித்த அறிக்கையை ஐ.நா தலைவர் அண்டோனியா கட்ரஸ் நேற்று வெளியிட்டார். அதில், கடந்த ஆண்டு மட்டுமே எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் இது போன்ற சண்டைகளில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானில் மட்டும் 3,512 சிறார்கள் சென்ற ஆண்டு பலியாகியுள்ளனர். இது மொத்த சிறார் பலி எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். ஆப்கானிஸ்தானின் சரித்திரத்திலேயே இதுதான் மிக அதிகமான சிறார் பலி எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அது போலவே, அப்பாவிச் சிறார்களை ஆயுதம் ஏந்தச் செய்து சண்டையில் ஈடுபடுத்துவதும் நடைபெற்று வருவது வேதனைக்குரியது என கட்ரஸ் தெரிவித்தார். சோமாலியா மற்றும் சிரியாவில் சிறார்களை ஆயுதமேந்தச் செய்யும் நடவடிக்கை முந்தைய 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
தெற்கு சூடானில் சென்ற ஆண்டு நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களில் 1,022 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். அங்கு ஆயுதமேந்திய சண்டைக் குழுக்கள் மட்டுமல்லாமல், அரசே சிறார்களை ராணுவத்தில் ஈடுபடுத்தியது வேதனை அளிப்பதாக கட்ரஸ் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X