என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை மோதி தாக்குதல்
Byமாலை மலர்29 Jun 2017 5:31 AM GMT (Updated: 29 Jun 2017 5:31 AM GMT)
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை வேகமாக மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலியா:
பிரேசில் நாட்டின் அதிபராக மைக்கேல் டெமர் பதவி வகித்து வருகிறார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தலைநகர் பிரேசிலியாவில் அதிபர் மாளிகை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாளிகையின் முன் பக்க மெயின் ‘கேட்’ மீது கார் மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.
வேகமாக வந்த அந்த கார் அதிபர் மாளிகையின் கேட் மீது அதி பயங்கரமாக மோதியது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி காரை நிறுத்தினார்கள்.
அதன் பின்னர் காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். இத்தாக்குதல் நடந்த போது அதிபர் மைக்கேல் டெமர் மாளிகையில் இல்லை. இவருக்கு முன்பு அதிபராக இருந்து டில்மாரூசெப்பும் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
பிரேசில் நாட்டின் அதிபராக மைக்கேல் டெமர் பதவி வகித்து வருகிறார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தலைநகர் பிரேசிலியாவில் அதிபர் மாளிகை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாளிகையின் முன் பக்க மெயின் ‘கேட்’ மீது கார் மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.
வேகமாக வந்த அந்த கார் அதிபர் மாளிகையின் கேட் மீது அதி பயங்கரமாக மோதியது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி காரை நிறுத்தினார்கள்.
அதன் பின்னர் காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். இத்தாக்குதல் நடந்த போது அதிபர் மைக்கேல் டெமர் மாளிகையில் இல்லை. இவருக்கு முன்பு அதிபராக இருந்து டில்மாரூசெப்பும் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X