என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
15 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை புரட்டி போட்ட கனமழை - 150 பேர் பலி
Byமாலை மலர்28 May 2017 2:18 PM GMT (Updated: 28 May 2017 2:18 PM GMT)
இலங்கையில் தற்போது கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு 2003-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டையை புரட்டி போட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 150-ஐ கிட்டத்தட்ட எட்டியுள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 124 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சத்து 42 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புக் குழு கூறியுள்ளது.
24 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் 319-க்கும் மேற்பட்ட பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் முப்படை வீரர்கள் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கைக்கு உதவி செய்யும் விதமாக இந்தியா மூன்று கப்பல்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை நேற்று அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X