என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திடீர் மாரடைப்பு: பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் தாவூத்இப்ராகிம் கவலைக்கிடம்?
Byமாலை மலர்29 April 2017 5:15 AM GMT (Updated: 29 April 2017 5:15 AM GMT)
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத்இப்ராகிம் திடீர் மாரடைப்பால் பாகிஸ்தானில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கராச்சி:
பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் தாவூத் இப்ராகிம் கவலைக்கிடமாக சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 250 பேர் உயிரிழந்தனர். அதில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி தலைமறைவானார். எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது.
தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். அவரை ஒப்படைக்கும்படி பலமுறை இந்தியா கேட்ட போது, அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் மறுத்துவருகிறது.
இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், கராச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது. அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அது உண்மையல்ல பரப்பப்பட்ட வதந்தி ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. இறுதியாக தாவூத் இப்ராகிம் கடந்த 2001-ம் ஆண்டு பொது இடத்தில் தோன்றினார். பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து வெளியாகும் நியூஸ்லைன் பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருந்தார்.
பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் தாவூத் இப்ராகிம் கவலைக்கிடமாக சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 250 பேர் உயிரிழந்தனர். அதில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி தலைமறைவானார். எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது.
தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். அவரை ஒப்படைக்கும்படி பலமுறை இந்தியா கேட்ட போது, அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் மறுத்துவருகிறது.
இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், கராச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது. அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அது உண்மையல்ல பரப்பப்பட்ட வதந்தி ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. இறுதியாக தாவூத் இப்ராகிம் கடந்த 2001-ம் ஆண்டு பொது இடத்தில் தோன்றினார். பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து வெளியாகும் நியூஸ்லைன் பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X