என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 56). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி. இவரது மனைவி பெயர் ராஜாமணி (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது.
கணவன்-மனைவியும் திருமண விழாவில் சமையல் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு 8 மணியளவில் கணவன் - மனைவி இருவரும் ரெங்கம் பாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்துக்கு சென்றனர். திடீரென இருவரும் கை கோர்த்தபடி அந்த ரெயில் முன் பாய்ந்தனர்.
இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்தி முதல் கட்ட விசாரணையில் மாதேஸ்வரன் காசநோயால் அவதிப்பட்டு வந்தாராம். எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாராம். மேலும் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.
மேலும் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முடியாமலும் கஷ்டப்பட்டார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கமும் அந்த தம்பதியை வாட்டி வந்தது. இதனால் மாதேஸ்வரன் வாழ்வதை விட சாகலாம் என்று மனைவியிடம் கூறி வந்தாராம்.
“நானும் உங்களுடன் “செத்து விடுகிறேன்” என்று மனைவி ராஜாமணியும் அழுதபடி கூறி உள்ளார். இதையொட்டி கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று இரவு ஓடும் ரெயில் முன் கைகோர்த்தபடி பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும் இந்த பரிதாப சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்த கணவன்-மனைவி உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. ஆஸ்பத்திரி முன் அவர்களின் உறவினர்கள் கண்ணீர் சிந்தியபடி உள்ளனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்