என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வடமதுரையில் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம் அடைந்த ஆசிரியை
வடமதுரை:
திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைபட்டி மடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி (வயது28). பி.எட்., முடித்து ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்.
இவரும் திண்டுக்கல் உலகம்பட்டியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜேசுராஜ் (30) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். ஜேசுராஜ் ஐ.டி.ஐ. முடித்து விட்டு வயரிங் வேலைகள் பார்த்து வந்தார்.
ஜான்சிராணிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யவே இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். வாடிப்பட்டி மாதா கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.
தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடி பார்த்த ஆரோக்கியம்மாள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இதனையடுத்து புதுமண தம்பதிகள் இன்று போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரையும் அழைத்து பேசிய போலீசார் அவர்கள் மேஜர் என்பதால் எந்த இடையூறும் செய்ய கூடாது என்று அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்