search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரையில் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம் அடைந்த ஆசிரியை
    X

    வடமதுரையில் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம் அடைந்த ஆசிரியை

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் ஆசிரியை தஞ்சம் அடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைபட்டி மடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி (வயது28). பி.எட்., முடித்து ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்.

    இவரும் திண்டுக்கல் உலகம்பட்டியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜேசுராஜ் (30) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். ஜேசுராஜ் ஐ.டி.ஐ. முடித்து விட்டு வயரிங் வேலைகள் பார்த்து வந்தார்.

    ஜான்சிராணிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யவே இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். வாடிப்பட்டி மாதா கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.

    தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடி பார்த்த ஆரோக்கியம்மாள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    இதனையடுத்து புதுமண தம்பதிகள் இன்று போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரையும் அழைத்து பேசிய போலீசார் அவர்கள் மேஜர் என்பதால் எந்த இடையூறும் செய்ய கூடாது என்று அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டனர். #tamilnews

    Next Story
    ×