என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரணியில் ரேஷன் அரிசி கடத்திய லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, தூத்தார் தெரு பகுதியில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் பரவியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அப்போது ஒரு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டு அதனை சிறை பிடித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேனில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர்.
தகவல் அறிந்ததும் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறை பிடிக்கப்பட்ட லாரியையும் அதில் இருந்தவர்களையும் மீட்டனர்.
லாரியில் மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை லாரியுடன் பறிமுல் செய்தனர். மேலும் அதில் இருந்த பெண் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கீதா, பாபு, ஆரம்பாக்கம் தோக்கமூர் பகுதியை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன், கார்த்திக் என்பது தெரிந்தது.
அவர்கள் ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மொத்தமாக அரிசியை வாங்கி ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
ரேஷன் அரிசியை கொடுத்த கடை ஊழியர்கள் யார்? அரிசி கடத்தலில் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்