search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவ பெண்கள் போராட்டம் நடத்திய காட்சி
    X
    நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவ பெண்கள் போராட்டம் நடத்திய காட்சி

    நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவ பெண்கள் போராட்டம்

    மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டோம் என நாகை மீனவ பெண்கள் கலெக்டர் அலுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர்:

    ஓக்கி புயலில் சிக்கி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதுவரை அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இதைதொடர்ந்து நாகை நம்பியார் நகரை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் ஊர்வலமாக நாகை கலெக்டர் அலுவலகம் நோக்கி இன்று காலை வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்து அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது பெண்கள், புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. மத்திய- மாநில அரசுகள் இதுவரை மீட்பு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாயமான மீனவர்களை கண்டு பிடிக்கும் வரை நாங்கள் யாரும் வீட்டுக்கு செல்ல மாட்டோம்’ என்று ஆவேசத்துடன் கூறினர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள், போலீசார் ஆகியோர் போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மீனவ பெண்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் மீனவபெண்களின் முற்றுகை போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×