என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங் - அ.தி.மு.க. வெளிநடப்பு
Byமாலை மலர்23 Nov 2017 7:57 AM GMT (Updated: 23 Nov 2017 7:57 AM GMT)
புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் குளிர்கால கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன் தலைமையில் அரிசி, சர்க்கரை, துணி ஆகியவற்றை எடுத்து வந்தனர். அவர்களை சட்டசபை காவலர்கள் தடுத்தனர். அதையும் மீறி பொருட்களுடன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மைய மண்டபத்திற்குள் வந்து அமர்ந்தனர். கூட்டத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.
அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரும் எழுந்து நின்று பேசினர். இலவச அரிசி, சர்க்கரை, துணி எதையும் அரசு வழங்கவில்லை. அரசு அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என பொருட்களை காட்டி பேச தொடங்கினார். அவர்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் ஏடுகளை தாக்கல் செய்து கொண்டிருந்தார். இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை நோக்கி இலவச துணி எங்கே? இலவச சர்க்கரை எங்கே? இலவச அரிசி எங்கே? என்ற பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். அவர்களை சட்டசபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
சபாநாயகர் அ.தி.மு.க. உறுப்பினர்களை இருக்கைக்கு செல்லும்படி கூறினார். இதன்பின் இருக்கைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சபையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி தராததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினர்.
இதேபோல என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தாதை சுட்டிக்காட்டினர். அப்போது ரங்கசாமி, கவர்னர் மீது வீண்பழி சுமத்தாதீர்கள். எதற்கெடுத்தாலும் கவர்னரை கைகாட்டாதீர்கள். நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று கூறினார்.
ஆனால், சபாநாயகர் அவர்களை பேச அனுமதிக்கவில்லை. அரசின் அலுவல்கள் முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் கூறினார். இதற்கு சம்மதிக்காமல் ரங்கசாமி வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார்.
அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், அசோக் ஆனந்து, சுகுமாரன், செல்வம், கோபிகா, சந்திர பிரியங்கா ஆகியோரும் வெளியேறினர். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் சட்டசபைக்கு வரவில்லை.
வெளிநடப்பு செய்த ரங்கசாமி நிருபர்களிடம் கூறும் போது, இந்த ஆட்சி வந்த பிறகு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எதற்கெடுத்தாலும் கவர்னரை காரணம் காட்டுகிறார்கள். எனவே தான் வெளிநடப்பு செய்தோம் என்று கூறினார்.
புதுவை சட்டசபையில் குளிர்கால கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன் தலைமையில் அரிசி, சர்க்கரை, துணி ஆகியவற்றை எடுத்து வந்தனர். அவர்களை சட்டசபை காவலர்கள் தடுத்தனர். அதையும் மீறி பொருட்களுடன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மைய மண்டபத்திற்குள் வந்து அமர்ந்தனர். கூட்டத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.
அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரும் எழுந்து நின்று பேசினர். இலவச அரிசி, சர்க்கரை, துணி எதையும் அரசு வழங்கவில்லை. அரசு அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என பொருட்களை காட்டி பேச தொடங்கினார். அவர்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் ஏடுகளை தாக்கல் செய்து கொண்டிருந்தார். இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை நோக்கி இலவச துணி எங்கே? இலவச சர்க்கரை எங்கே? இலவச அரிசி எங்கே? என்ற பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். அவர்களை சட்டசபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
சபாநாயகர் அ.தி.மு.க. உறுப்பினர்களை இருக்கைக்கு செல்லும்படி கூறினார். இதன்பின் இருக்கைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சபையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி தராததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினர்.
இதேபோல என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தாதை சுட்டிக்காட்டினர். அப்போது ரங்கசாமி, கவர்னர் மீது வீண்பழி சுமத்தாதீர்கள். எதற்கெடுத்தாலும் கவர்னரை கைகாட்டாதீர்கள். நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று கூறினார்.
ஆனால், சபாநாயகர் அவர்களை பேச அனுமதிக்கவில்லை. அரசின் அலுவல்கள் முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் கூறினார். இதற்கு சம்மதிக்காமல் ரங்கசாமி வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார்.
அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், அசோக் ஆனந்து, சுகுமாரன், செல்வம், கோபிகா, சந்திர பிரியங்கா ஆகியோரும் வெளியேறினர். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் சட்டசபைக்கு வரவில்லை.
வெளிநடப்பு செய்த ரங்கசாமி நிருபர்களிடம் கூறும் போது, இந்த ஆட்சி வந்த பிறகு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எதற்கெடுத்தாலும் கவர்னரை காரணம் காட்டுகிறார்கள். எனவே தான் வெளிநடப்பு செய்தோம் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X