என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அருகே இன்று 2 பேர் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பல் வெறிச்செயல்
Byமாலை மலர்20 Nov 2017 10:44 AM GMT (Updated: 20 Nov 2017 10:44 AM GMT)
தூத்துக்குடி அருகே இன்று ஓட ஓட விரட்டி 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய 10 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரத்தை சேர்ந்தவர்கள் கணேசன் (வயது 30), கொடிகாட்டுராஜா (18). கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவரான முனியசாமி மற்றும் அவரது ஆதரவாளர் முத்துக்குமார் ஆகிய இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டை கொலை வழக்கில் கணேசன், கொடிகாட்டு ராஜா உள்பட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணேசன், கொடிகாட்டு ராஜா உள்ளிட்ட 6 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.
தினமும் அவர்கள் தூத்துக்குடி ஜே.எம்.1-வது கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தனர். வழக்கம் போல இன்று காலை சுமார் 11 மணியளவில் 6 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒரு காரில் கோர்ட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
புதியம்புத்தூர்- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை பாலம் அருகே சென்ற போது பின்னால் ஒரு லாரியில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் முன்னால் சென்ற கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதையடுத்து கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்றது. பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக கணேசன், கொடிகாட்டு ராஜா உள்ளிட்ட 6 பேரும் காரில் இருந்து இறங்கி சாலையோரத்தில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடினர்.
எனினும் லாரியில் வந்த கும்பல் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கணேசன், கொடிகாட்டு ராஜா ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கை, கால்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவரும் பலியானதை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் முனியசாமி உள்பட 2 பேர் கொலைக்கு பழிக்கு பழிவாங்க அவரது ஆதரவாளர்கள் கடந்த சில மாதங்களாக திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் கணேசன், கொடிகாட்டு ராஜா ஆகியோர் ஜாமீனில் வெளிவந்ததை அறிந்து தினமும் நோட்டமிட்டு அவர்களை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான 10 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரத்தை சேர்ந்தவர்கள் கணேசன் (வயது 30), கொடிகாட்டுராஜா (18). கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவரான முனியசாமி மற்றும் அவரது ஆதரவாளர் முத்துக்குமார் ஆகிய இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டை கொலை வழக்கில் கணேசன், கொடிகாட்டு ராஜா உள்பட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணேசன், கொடிகாட்டு ராஜா உள்ளிட்ட 6 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.
தினமும் அவர்கள் தூத்துக்குடி ஜே.எம்.1-வது கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தனர். வழக்கம் போல இன்று காலை சுமார் 11 மணியளவில் 6 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒரு காரில் கோர்ட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
புதியம்புத்தூர்- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை பாலம் அருகே சென்ற போது பின்னால் ஒரு லாரியில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் முன்னால் சென்ற கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதையடுத்து கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்றது. பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக கணேசன், கொடிகாட்டு ராஜா உள்ளிட்ட 6 பேரும் காரில் இருந்து இறங்கி சாலையோரத்தில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடினர்.
எனினும் லாரியில் வந்த கும்பல் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கணேசன், கொடிகாட்டு ராஜா ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கை, கால்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவரும் பலியானதை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் முனியசாமி உள்பட 2 பேர் கொலைக்கு பழிக்கு பழிவாங்க அவரது ஆதரவாளர்கள் கடந்த சில மாதங்களாக திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் கணேசன், கொடிகாட்டு ராஜா ஆகியோர் ஜாமீனில் வெளிவந்ததை அறிந்து தினமும் நோட்டமிட்டு அவர்களை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான 10 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X