search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி உதவி செய்தாலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: புகழேந்தி
    X

    மோடி உதவி செய்தாலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: புகழேந்தி

    மோடி உதவி செய்வார் என்று அமைச்சர் கூறினாலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்று அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் கட்சியின் 46-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளரும், கட்சியின் செய்தி தொடர்பு உறுப்பினருமான புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-



    இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர தங்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். சின்னத்தை கைப்பற்றுவதற்காக எங்கள் அணியினர் லஞ்சம் கொடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். தற்போது அமைச்சர் பேச்சில் இருந்தே யார் லஞ்சம் கொடுத்தார்கள் என்பது தெளிவாகும். மோடியே உதவி செய்தாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் கண்டிப்பாக இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கே கிடைக்கும்.



    கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் செயல்படும் எங்கள் அணியே உண்மையான அ.தி.மு.க. ஆகும். அதனை துணைப் பொதுச் செயலாளர் தினகரன் சிறப்பாக வழிநடத்திச் செல்வார் என்பதால்தான் அவரது தலைமையின் கீழ் நாங்கள் பணியாற்றி வருகிறோம். சின்னம் எங்களுக்கு கிடைத்ததும் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×