search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் பேட்டி
    X

    தீக்குளிப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் பேட்டி

    நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் தீக்குளித்த போது மனு வாங்கும் பிரிவில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். தீக்குளிப்பு சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு வந்தார். அவர் ஒரே குடும்பத்தினர் தீயில் கருகி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் கலெக்டர் எடுத்தார். கலெக்டர் மனுக்கள் வாங்குவதற்கு வேறு அதிகாரிகளை நியமித்து விட்டு அவர் உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

    பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘தீக்குளிப்பு சம்பவத்திற்கு காரணமான குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்படும். 4 பேருக்கும் 70 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.
    Next Story
    ×